பெண்கள் இழிவு...அழுத்தமா...ஏன் நடவடிக்கை இல்லை...இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கேள்வி!!
சென்னை: சமூக வலைதளங்களில் பெண்கள் குறித்து இழிவாக கருத்துகள் பதிவிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய சமூகத்தில் பெண்கள் கல்வி,தொழில்துறை,மருத்துவம் மற்றும் ஊடகங்களில் ஏனைய வளர்ந்த நாடுகளின் பெண்களுக்கு இணையான பங்கை கொடுத்து வருகிறார்கள் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தவ்ஹீத் ஜமாஅத் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி விடுத்து இருக்கும் அறிக்கையில், ''இந்திய சமூகம் சந்தித்துக் கொண்டு வரும் ஆண்,பெண் பாரபட்சம், நீதியின்மை, பாலியல் வன்முறை, வகுப்புவாதம், மதவாத அரசியல், சிறுபான்மை வெறுப்பு, ஆணவக் கொலைகள் என பல்வேறு சமகாலப் பிரச்சனைகளுக்கு எதிராக பெண் செயல்பாட்டாளர்களும்,பெண் ஊடகவியலாளர்களும், கூர்மையாக எழுதியும்,பேசியும் வருகிறார்கள்.

இவர்களின் எழுத்தும்,பேச்சும் மக்கள் மத்தியில் கருத்துப் புரட்சியையும்,சரியான புரிதலையும் உருவாக்குகிறது. இதனால் எரிச்சலடைகின்ற வகுப்புவாத, மதவாத சக்திகள் பெண் ஆளுமைகள் குறித்து ஆபாசமாகவும், இழிவாகவும் சமூக ஊடகங்களில் எழுதியும், பேசியும் மன உளைச்சலை தருகிறார்கள். இதன் மூலம் அவர்களின் குரல் பாதிக்கப்பட்டோர் பக்கம் ஒலிக்காமல் இருக்க தடுக்க முயல்கிறார்கள்.
வகுப்புவாத, மதவாத சக்திகளால் தாக்கப்பட்ட பெண்கள் பலர் பல்வேறு புகார்கள் காவல்துறையில் அளித்திருந்தும் அரசியல் அழுத்தம் காரணமாகவே நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. இது தமிழக காவல்துறை மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையையும், நன்மதிப்பையும் குலைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே,தமிழக அரசும்,காவல்துறையும் அரசியல் அழுத்தங்களுக்கு அஞ்சாமலும், தயக்கமின்றியும், சமூக வலைதளங்களில் பெண்கள் குறித்து ஆபாசமாக, இழிவாக கருத்துகள் பதிவிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications