எடப்பாடிக்கு புகழாரம்.. பட்ஜெட்டில் ஒபிஎஸ் வெளியிட்ட கவர்ச்சிகரமான அறிவிப்புகள்.. விவரம்
சென்னை: தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தின் தலைவர் விபத்தில் இறந்தால் 4 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இயற்கையாக இறந்தால் 2 லட்சம் காப்பீடு தொகை வழங்கப்படும் என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம், கடந்த 2ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, 3 நாட்கள் கூட்டத்தொடர் நடந்தது. இதில் விதி எண் 110ன் கீழ் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். மேலும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த கூட்டத்தை திமுக - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
இந்தநிலையில், 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப்பேரவை இன்று காலை சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது.

இடைக்கால பட்ஜெட்
துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பாக வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தின் தலைவர் விபத்தில் இறந்தால் 4 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இயற்கையாக இறந்தால் 2லட்சம் காப்பீடு தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

சிறந்த நிர்வாகி
கடந்த நிதியாண்டில் தமிழக அரசின் கடன் சுமை 4.8 லட்சம் கோடியில் இருந்து ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பது நிதியமைச்சரின் அறிவிப்பில் தெரியவந்துள்ளது. பட்ஜெட்டை உரையை தொடங்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சிறந்த நிர்வாகி என்று வெகுவாக பாராட்டினார் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்.

பிரதமரின் வீட்டு வசதி திட்டம்
பட்ஜெட்டில் துறை வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி விவரத்தை இப்போது பார்க்கலாம். மின்துறை, 7217 கோடி, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 6683 கோடி, உயர்கல்வித்துறை 5478 கோடி, பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ3,700 கோடி நிதி ஒதுக்கீடு, நெடுஞ்சாலை துறைக்கு ரூ18,750 கோடி நிதி ஒதுக்கீடு.

காவல்துறை
2000 மின்சார பேருந்துகள் உள்பட 12000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு தமிழகத்தில் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும். மீன்வளத்துறைக்கு ரூ580 கோடி நிதி ஒதுக்கீடு, உள்ளாட்சி துறைகளுக்கு ரூ22,218 கோடி நிதி ஒதுக்கீடு, காவல்துறைக்கு ரூ9,567 கோடி நிதி ஒதுக்கீடு, நீதித்துறை நிர்வாகத்துக்கு ரூ1,437 கோடி ஒதுக்கீடு, நீர்வள துறைக்கு ரூ6,453 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications