4-வது நாளாக சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்.. எழிலகத்தை முற்றுகையிட முயன்றதால் கைது
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரியும், திமுக தேர்தல் வாக்குறுதி எண் 311 ஐ நிறைவேற்ற வலியுறுத்தியும் இடை நிலை ஆசிரியர்கள் சென்னையில் இன்று 4-வது நாளாக போராட்டம் நடத்தினர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட அவர்கள் எழிலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து வாகனங்களில் அழைத்து சென்றனர். அப்போது போலீசார் ஆசிரியர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் உண்டானது.
திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று சம வேலைக்கு சம ஊதியம் தரப்படும் என்பது. தேர்தல் வாக்குறுதி 311 ஆக இந்த வாக்குறுதியை திமுக அளித்த நிலையில், ஆட்சி முடிவடையும் நிலையிலும் இதனை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

4வது நாளாக போராட்டம்
இடை நிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னையில் நேற்று முன்தினம் பள்ளிக் கல்வி இயக்குனரக அலுவலகத்தை இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தை தொடங்கினர். கடந்த சனிக்கிழமையும் சென்னையில் கூடிய அவர்கள் எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடினர்.
நேற்றும் 3 வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கைது செய்யப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இதையடுத்து இன்றும் 4 வது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி போராட்டம் நடத்தினர். சென்னை எழிலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விரைவில் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்
அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையின் நடுவே அமர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
எந்த வித நிபந்தனையும் இன்றி போர்க்கால அடிப்படையில் விரைவில் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இல்லெயெனில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார்கள். கோரிக்கையை நிறைவேற்ற கூறி போராடினால் கூட அதற்கும் இந்த அரசு அனுமதி மறுக்கின்றது என்றும் கூறினர்.

போலீசார் இடையே தள்ளுமுள்ளு
தொடர்ந்து போராட்டக்காரர்கள் உழைப்பாளர் சிலை அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை நிறைவேற்ற கோரி பதாகைகளை ஏந்தியபடி போராட்டம் செய்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்ய முயன்ற போது அவர்கள் அங்கிருந்து எழ மறுத்தனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். இதில் ஒரு சிலர் கைதாக மறுப்பு தெரிவித்ததால் போலீசார் ஆசிரியர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு உண்டானது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications