நச்சுனு பிளான் போட்டு.. 26 வயது இளம் வீரரை தூக்கிய தோனி.. என்ன காரணம்? சிஎஸ்கேவின் இமாலய பிளான்!
சென்னை; 2022 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி முக்கியமான இளம் வீரர் ஒருவரை ஏலம் எடுத்துள்ளது.
Recommended Video
2022 ஐபிஎல் தொடருக்கான ஏலம் நேற்று நடந்தது. மீதம் உள்ள வீரர்கள் இன்று ஏலம் விடப்பட உள்ளனர்.
நேற்று இஷான் கிஷான் அதிகபட்சமாக 15.25 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டார். அதேபோல் தவான் பஞ்சாப் அணிக்கும், ஷ்ரேயாஸ் கொல்கத்தா அணிக்கும், அஸ்வின் ராஜஸ்தான் அணிக்கும், டு பிளசிஸ் பெங்களூர் அணிக்கும் ஏலம் விடப்பட்டனர்.

ஷர்துல் தாக்கூர்
ஷர்துல் தாக்கூர் டெல்லி அணிக்கு ஏலம் விடப்பட்டார். ஐபிஎல் ஏலத்தில் நேற்று சிஎஸ்கே நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. சிஎஸ்கே தொடக்கத்தில் எந்த வீரர்களுக்கும் ஏலம் கேட்கவில்லை. கடைசியில் ஷாருக்கான், திவாட்டியா போன்ற வீரர்களை மட்டுமே சிஎஸ்கே ஏலம் கேட்டது. இடையில் பெரிதாக சிஎஸ்கே பலரை ஏலம் எடுக்கவில்லை.

சிஎஸ்கே
ஆனால் சிஎஸ்கே முடிந்த வரை தங்கள் பழைய டீமை எடுப்பதிலேயே தீவிரமாக இருந்தது. இதன் காரணமாகவே சாஹரை 14 கோடி ரூபாய் வரை கொடுத்து சிஎஸ்கே எடுத்தது. ராயுடுவை ஹைதராபாத் அணியோடு போட்டி போட்டு 6.75 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே எடுத்தது. பிராவோவையும் 4.40 கோடிக்கு ஹைதராபாத் அணியோடு போராடி சிஎஸ்கே எடுத்தது. ஷர்துல், டு பிளசிஸ், ஹஸல்வுட் ஆகியோர் தவிர மற்ற வீரர்களை சிஎஸ்கே அணி மீண்டும் எடுத்துவிட்டது.

சிஎஸ்கே பிளான்
இந்த நிலையில் சிஎஸ்கேவில் ஹஸல்வுட் இல்லாத காரணத்தால் 150 கிமீ வேகத்தில் பவுலிங் செய்யும் வீரர்கள் இல்லை. நன்றாக பவுன்சர் வீச கூடிய, அதிக வேகத்தில் பவுலிங் செய்ய கூடிய வீரர்கள் இல்லாத நிலை உள்ளது. லுங்கி நிகிடியும் அணியில் இல்லை. இப்போது அணியில் உள்ள சாகர் ஸ்விங் போடுபவர். பிராவோ ஸ்லோ பால் வீசுவார். இதனால் சிஎஸ்கேவிற்கு நல்ல பாஸ்ட் பவுலர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தோனி
இதை பூர்த்தி செய்யவே நேற்று தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி துஷார் தேஷ்பாண்டே என்ற 26 வயது இளைஞரை எடுத்தது. மும்பையை சேர்ந்த இவர் கிளாஸ் ஏ கிரிக்கெட் வீரர் ஆவார். 2016 -17 ரஞ்சி தொடரில் மும்பை அணியாகக் மிக சிறப்பாக ஆடினார். அதேபோல் 2018-19 விஜய் ஹசாரே கோப்பை தொடரில் 5 விக்கெட் haul உட்பட பல போட்டிகளில் சிறப்பாக விக்கெட் எடுத்தார்.

டெல்லி
இதனால் கடந்த 2020 சீசனில் டெல்லி அணிக்கு எடுக்கப்பட்டார் துஷார் தேஷ்பாண்டே. அந்த தொடரில் 5 போட்டி ஆடி 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதேபோல் கடந்த வருடம் சிஎஸ்கே அணிக்கு நெட் பவுலிங்கில் சில போட்டிகள் பவுலிங் செய்தார். இவரின் திறமையே 150 கிலோ மீட்டர் வேகத்தில் யார்க்கர், பவுன்சர் வீசுவதுதான். இவர் கிளாஸ் ஏ போட்டிகளில் பல முறை இப்படி பவுலிங் செய்துள்ளார். வெறும் 20 லட்சத்திற்கு இவர் எடுக்கப்பட்டார்.

துஷார் தேஷ்பாண்டே
அதேபோல் இந்திய அணிக்கும் கடந்த 3 வருடங்களாக அவ்வப்போது இவர் நெட் பவுலிங் செய்து வருகிறார். வெளிநாட்டு தொடர்களுக்கு இந்திய அணி செல்லும் போது துஷார் தேஷ்பாண்டே இந்திய அணியின் நெட் பவுலராக சிறப்பாக பவுலிங் செய்துள்ளார். ஷரத்துல் தாக்கூருக்கு பதிலாக சிஎஸ்கே இவரை முழு நேர பவுலராக் பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. சிஎஸ்கே அணியில் இப்போது அப்படி பவுலர்கள் யாரும் இல்லை என்பதால் தேஷ்பாண்டேவை சிஎஸ்கே எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications