அந்த செல்லத்தை தூக்கிட்டு வாங்கடா.. சத்தமின்றி ஐபிஎல் உலகில் "பதான்" புரட்சி.. மலைத்து போன பிசிசிஐ!
சென்னை: ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் சத்தமே இன்றி மாபெரும் புரட்சி ஒன்றை செய்து கொண்டு இருக்கிறார். பிசிசிஐ அமைப்பு இவரின் கொஞ்சம் மலைத்து போய் இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
Recommended Video
இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தற்போது வர்ணனையாளர் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார். கிரிக்கெட் விமர்சகராகவும் இருக்கிறார். இந்திய அணியில் ஒரு காலத்தில் முக்கியமாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் பவுலராக இருந்தார்.
அதன்பின் ஐபிஎல் போட்டிகளிலும் சிஎஸ்கே உட்பட பல அணிகளுக்கு நன்றாக ஆடினார். தற்போது பல்வேறு ஐபிஎல் அணிகளுக்கு இர்பான் பதான் ஆலோசனை வழங்கி வருகிறார். அதோடு புதிய இளம் வீரர்களை தேர்வு செய்வதிலும் இவர் முக்கிய பங்கு ஆற்றி வருகிறார்.

எப்படி
இர்பான் பதான் சத்தமே இன்றி இந்திய ஐபிஎல் உலகிற்கு பல திறமையான வீரர்களை அடையாளம் காட்டிக்கொண்டு வருகிறார். ஒரு குறிப்பிட்ட அணிக்கு என்று இல்லாமல் பல்வேறு அணிகளுக்கு இவர் திறமையான வீரர்களை பரிந்துரை செய்து வருகிறார். முக்கியமாக ஹைதராபாத் அணியின் டேலண்ட் ஸ்கவுட் பணிகளை மேற்கொண்டு வரும் இர்பான் பதான் பல முக்கியமான இளம் வீரர்களை ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தி உள்ளார்.

2013
2013ல் முதலில் ஹர்திக் பாண்டியாவை அடையாளம் கண்டது இர்பான் பதான்தான். அப்போதே ஹர்திக் பாண்டியா சிறந்த ஆல் ரவுண்டராக் வருவார் என்று கணித்தார். அதோடு ஹைதராபாத் அணியில் இவரை எடுக்க வேண்டும் என்று லட்சுமணனுக்கு பரிந்துரையும் செய்தார். ஆனால் மும்பை அணி ஹர்திக் பாண்டியாவை எடுத்தது. அதோடு பாண்டியாவும் முக்கியமான ஆல் ரவுண்டர்களில் ஒருவராக உருவெடுத்தார்.

தற்போது
இந்த நிலையில்தான் தற்போது உம்ரான் மாலிக் என்ற ஜம்மு காஷ்மீர் வீரரை அடையாளம் கண்டு ஹைதராபாத்தை அணிக்கு பரிந்துரை செய்தார். நடராஜனுக்கு மாற்று வீரராக வந்த உம்ரான் அசால்ட்டாக 153 கிமீ வேகத்தில் பந்து வீசுகிறார். நேற்று பெங்களூர் அணிக்கு எதிராக இவர் பவுலிங் தாண்டவம் ஆடினார். 21 வயதே ஆன இவர் சர்வதேச அளவில் வலுவான வெளிநாட்டு வீரர்களை தனது வேகப்பந்து மூலம் திணற வைத்தார். பொதுவாக ஷார்ட் பந்துகளை இவ்வளவு வேகத்தில் வீச முடியாது. ஆனால் உம்ரான் அதையும் கூட 153 கிமீ வேகத்தில் வீசினார்.

இர்பான்
காஷ்மீரில் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்த இவரை அடையாளம் கண்டது இர்பான் பதான்தான். இவருக்கு தனிப்பட்ட பயிற்சியையும் இர்பான் பதான் வழங்கினார். அதோடு காஷ்மீரில் பல திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் வெளியே கொண்டு வர வேண்டும். அவர்களுக்கு களம் அமைக்க வேண்டும் என்று இர்பான் பதான் கூறினார். ஹைதராபாத்தின் இன்னொரு வீரர் அப்துல் சமாத்தையும் காஷ்மீரில் இருந்து இவர்தான் ஐபிஎல்லுக்கு கொண்டு வந்தார்.

இர்பான் பதான் அறிவுரை
இர்பான் பதான் அறிவுரை காரணமாகவே ஹைதராபாத் அணியில் சமாத் எடுக்கப்பட்டார். தற்போது ஹைதராபாத் அணியின் மிக முக்கியமான ஆல் ரவுண்டர் வீரராக சமாத் இருக்கிறார். இதெல்லாம் போக மும்பை அணியில் வலைப்பயிற்சியில் கவனிக்கப்பட்டு வரும் ரஷீக் ஸலாம் என்ற வீரருக்கும் இர்பான்தான் பயிற்சி அளித்தது. இவரும் 150 கிமீ வேகத்தில் பவுலிங் செய்து கொண்டு இருக்கிறார்.

ஆடுவார்
விரைவில் மும்பை அணியில் அவர் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட அடையாளமே தெரியாத பல சிறப்பான திறமையான வீரர்களை இர்பான் பதான் அடையாளம் கண்டு ஐபிஎல் உலகிற்கு கொண்டு வந்துள்ளார். இர்பான் பதானின் இந்த நடவடிக்கைகளை பிசிசிஐ நிர்வாகிகள், பல முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

ரசிகர்கள் கோரிக்கை
அதேபோல் ரசிகர்களும் பிசிசிஐ இவருக்கு பவுலிங் பயிற்சியாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை வைக்க தொடங்கி உள்ளனர். அந்த செல்லத்தை அப்படியே தூக்கிட்டு வந்த இந்திய அணியில் பவுலிங் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. டி 20 உலகக் கோப்பை தொடருக்கு பின் மொத்தமாக பயிற்சியாளர் குழு மாற உள்ளதால் இர்பான் பதானை பவுலிங் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications