சசிகலா கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர்.. ஸ்டிரிக்ட் ஆபீசர் ரூபா.. இப்ப என்ன செய்கிறார் தெரியுமா?
ஐபிஎஸ் போலீஸ் அதிகாரி ரூபா திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்
Recommended Video
சென்னை: ரஃப் அண்டு டஃப் காக்கி சட்டை பெண்.. ஐபிஎஸ் ஆபீசர் ரூபாவை ஞாபகம் இருக்கா? அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா? சம்பந்தமே இல்லாமல் ஒரு துறையில் நுழைந்து கலக்கி வருகிறார்.
ஐபிஎஸ் ரூபா... கண்டிப்பானவர்.. நேர்மையானவர்.. யாருக்கும் பயப்படாதவர். சசிகலாவின் சுடிதார், ஹேண்ட்பேக் என்ற சொகுசான சிறை வாழ்க்கை வாழ்கிறார் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர்.. ஆடம்பர சிறை வாழ்க்கையின் வீடியோ ஆதாரத்தையும் வெளியிட்டு, சசிகலாவை வெச்சி செஞ்சவர்.. அந்த கரடுமுரடு பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபாதான் இப்போது கன்னட சினிமாவின் பின்னணி பாடகியாகிவிட்டார்.

ஏற்கனவே தனக்கு பாட்டு என்றால் உயிர், இந்துஸ்தானி இசையை கற்றிருக்கிறேன் என்று டிவி நிகழ்ச்சியில் சொல்லி வந்த ரூபாவுக்கு திடீரென சினிமாவில் பாட அழைப்பும் வந்துள்ளது.
"பேயலதாதா பீமண்ணா" படத்தில் ஒரு பாட்டை பாடும்படி கேட்டதற்கு, அதற்கு சம்மதமும் சொல்லி ஒரு பாட்டையும் பாடிவிட்டார் ரூபா. என்னதான் இந்துஸ்தானியை கற்று வைத்திருந்தாலும், இந்த பாடலை பாட ஒரு வாரம் டிரெயினிங் எடுத்து கொண்டு பாடியதாகவும் ரூபா சொல்கிறார்.
இதை பற்றி சோஷியல் மீடியாவிலும் தனது கருத்தை தெரிவித்துள்ள ரூபா, ஜானகி, லதா மங்கேஷ்கர், வாணிஸ்ரீ ஜெயராம் போன்றோரின் பாடல்கள் பிடிக்கும் என்றும் அதிலும் ஸ்ரேயா கோஷல் பாட்டு என்றால் எனக்கு உயிர் என்றும் சொல்கிறார் இந்த ஸ்டிரிக்ட் ஆபீசர் ரூபா!
அசத்துங்க ரூபா....!












Click it and Unblock the Notifications