Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக கூட்டணி.. “கண்டிஷன்” போட்ட அண்ணாமலை! டெல்லி தலைமைக்கே “பிரஷர்” கொடுப்பதா? வந்து விழும் கேள்வி

அதிமுகவுடனான கூட்டணியை அமைக்க ஜெயலலிதா மறைவுக்கு பிறகிலிருந்து பாஜக தலைமை முடிவு செய்து இபிஎஸ் - ஓபிஎஸ் மோதலை முடிவுக்கு கொண்டு வந்ததாக அப்போதே பேசப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவுடன் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்ந்தால் தனது பதவியை விட்டே ராஜினாமா செய்துவிடுகிறேன் என்று அண்ணாமலை அறிவித்தது, பாஜக தேசிய தலைமைக்கே விடுக்கப்பட்ட அச்சுறுத்தலா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக இடையிலான கூட்டணியில் கடந்த சில மாதங்களாக விரிசல் ஏற்பட்டு இருக்கும் நிலையில் இருக்கும், பாஜகவை ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல் குமாரின் கட்சித் தாவல் இந்த விரிசலை மேலும் பெரிதாக்கியது.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி பாஜகவிலிருந்து விலகியவுடன் அவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.

 அதிமுக பாஜக மோதல்

அதிமுக பாஜக மோதல்

அதன் தொடர்ச்சியாக பாஜக ஐடி விங் மாநில செயலாளராக இருந்த திலிப் கண்ணன் உள்ளிட்ட பலரும் கட்சியிலிருந்து வெளியேறி அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இணைந்து கொண்டனர். அதன் பின்னர் இரு கட்சி தலைவர்களும் ஒருவர் மீது ஒருவர் சரிமாரி குற்றச்சாட்டுகளை சுமத்திக்கொண்டதுடன், அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிசாமியின் படங்களும் எரிக்கப்பட்டன.

 பாஜக கூட்டம்

பாஜக கூட்டம்

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், "தமிழ்நாட்டில் பாஜக தனியாக இருந்தால் மட்டுமே நம்மால் அதை வளர்க்க முடியும். பாஜகவை நான் தனியாக வளர்த்து எடுக்க பாடுபட்டு வருகிறேன். எனக்கு உரிய சுதந்திரத்தை வழங்க வேண்டும்.

 அதிமுக கூட்டணி வேண்டாம்

அதிமுக கூட்டணி வேண்டாம்

நான் ஒன்றும் பாஜகவின் மேனேஜர் இல்லை. நான் கட்சியின் மாநில தலைவர் என்றுதான் சொல்கிறேன். வரும் 2024 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால், நான் வகித்து வகும் பாஜக மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக தொடர்வேன்.

 கிளம்பிய சலசலப்பு

கிளம்பிய சலசலப்பு

தமிழ்நாட்டில் பாஜகவை வெற்றிபெற வைப்பதற்கான திட்டங்களை நான் வைத்து உள்ளேன். என்னால் எனது வழியில் செயல்பட முடியாதபோது நான் கட்சியில் வகிக்கும் பதவியில் இருந்தே ராஜினாமா செய்து விடுகிறேன்." என்று தெரிவித்தார். அண்ணாமலையின் இந்த பேச்சால் பாஜகவிற்கு உள்ளேயும் வெளியிலும் பல்வேறு சலசலப்புகள் கிளம்பி இருக்கின்றன.

 தேசிய தலைமைக்கே அழுத்தம்

தேசிய தலைமைக்கே அழுத்தம்

இந்த நிலையில், அதிமுக கூட்டணியை கைவிட வேண்டும் என்று பாஜக தேசிய தலைமைக்கே அண்ணாமலை அழுத்தம் கொடுக்கிறாரா என்ற கேள்வியையும் பலர் எழுப்பி வருகிறார்கள். காரணம், அதிமுகவுடனான கூட்டணியை அமைக்க ஜெயலலிதா மறைவுக்கு பிறகிலிருந்து பாஜக தலைமை முடிவு செய்து இபிஎஸ் - ஓபிஎஸ் மோதலை முடிவுக்கு கொண்டு வந்ததாக அப்போதே பேசப்பட்டது.

 5 ஆண்டுகால கூட்டணி

5 ஆண்டுகால கூட்டணி

அன்றிலிருந்தே இரு கட்சிகளுக்கு மத்தியில் இணக்கமான சூழல் ஏற்பட்ட நிலையில், 2019 மக்களவைத் தேர்தலில் தமிழிசை சவுந்திரராஜன் மாநில தலைவராக இருந்தபோது கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. எல்.முருகன் தலைவராக இருந்தபோதும் 2021 சட்டசபைத் தேர்தலில் இந்த கூட்டணி தொடர்ந்தது. ஆனால், அண்ணாமலை தலைவரான பிறகு நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சி தனித்துப் போட்டியிட்டது.

 வந்து விழும் கேள்விகள்

வந்து விழும் கேள்விகள்

ஈரோடு கிழக்கில் அதிமுகவுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது, அவர் கூட்டணியையே கைவிட வலியுறுத்தி இருக்கிறார். இந்த நிலையில்தான் பத்திரிகையாளர் சுமந்த் ஸ்ரீ ராமன், அண்ணாமலை பேச்சை சுட்டிக்காட்டி, "அவர் தேசிய தலைமையையே அச்சுறுத்துகிறாரா? இப்படி பேசினால் செய்தி வெளியில் கசியும் என தெரியாதா? அல்லது அவரது தரப்பினர் வேண்டுமென்றே கசிய விட்டார்களா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+