பாஜக - அதிமுக கூட்டணி ரெடி.. டெல்லியில் முடிவு? ஆனால் முதல்வர் வேட்பாளர் வேற ஆள்? அப்போ எடப்பாடி?
சென்னை: பாஜக - அதிமுக கூட்டணி வைக்கும். என்டிஏ மீண்டும் உருவாகும். அப்படி உருவானால்.. பாஜகதான் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யும். மகாராஷ்டிராவில் ஷிண்டே முதல்வர் வேட்பாளர் ஆகவில்லை. அப்படித்தான் இங்கே நடக்கும். 117 இடங்களில் பாஜக போட்டியிடும். அதாவது பாதிக்கு பாதி இடங்களில் பாஜக போட்டியிடும். மீதி இடங்களில் அதிமுக போட்டியிடும், என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. தமிழக வெற்றிக் கழகம் - அதிமுக கூட்டணி உருவாகாத நிலையில், தற்போது மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி உருவாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

மீண்டும் சேரும் அதிமுக - பாஜக
பாஜக, அதிமுக இரண்டும் மாறி மாறி கூட்டணிக்கு தூதுவிட தொடங்கி உள்ளன. திமுகதான் எதிரி; வேற எந்த கட்சியுமே எதிரி இல்லை; திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறவே கூடாது என அதிரடியாக யோசிக்க முடியாத அளவிற்கு பல்டி அடித்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இன்னொரு பக்கம் அண்ணா திமுக எங்களுக்கு எதிரியே இல்லை..திமுகதான் எங்கள் ஒரே எதிரி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கூறியிருக்கிறார். இதனால் 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் அண்ணா திமுக- பாஜக கூட்டணி அமையும் என்றே கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகம் தனித்து விடப்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
பேட்டி
இவர்களுக்கு இடையே அமைய உள்ள கூட்டணி தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில். பாஜக - அதிமுக கூட்டணி வைக்கும். என்டிஏ மீண்டும் உருவாகும். அப்படி உருவானால்.. பாஜகதான் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யும். மகாராஷ்டிராவில் ஷிண்டே முதல்வர் வேட்பாளர் ஆகவில்லை. அப்படித்தான் இங்கே நடக்கும். 117 இடங்களில் பாஜக போட்டியிடும். அதாவது பாதிக்கு பாதி இடங்களில் பாஜக போட்டியிடும். மீதி இடங்களில் அதிமுக போட்டியிடும்.
இதை எப்படி எடப்பாடி ஏற்றுக்கொள்வார் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அதற்கெல்லாம் இங்கே பிரச்சனையே இல்லை. எடப்பாடி இதில் முடிவு எடுக்கவே முடியாது. அவருக்கு அந்த அதிகாரம் இல்லை. இன்னும் சொல்லப்போனால்.. முடிவு எல்லாம் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டது. பாஜகதான் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யும். இதில் விஜய்யை உள்ளே கொண்டு வர திட்டம் உள்ளது.
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர திட்டம் உள்ளது. பலரும் சீமானை உள்ளே கொண்டு வர திட்டம் உள்ளது என்கிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை. விஜயை கொண்டு வர திட்டம் உள்ளது. அதற்கான நகர்த்தல்கள் நடந்து வருகின்றன. இப்போது ஊழல் வைத்து திமுகவை எதிர்க்கிறார்கள். விஜய் - எடப்பாடி - பாஜக என்று எல்லோரும் திமுகவின் டாஸ்மாக் மேட்டரை எடுத்து பேசி வருகின்றனர். இதெல்லாம் திட்டமிட்டு செய்யப்பட்ட மூவ்கள்.
திமுகவுக்கு ஒன்றாக இவர்கள் பிரஷர் கொடுக்கிறார்கள். இந்த ஸ்டைலை வைத்தே சொல்லலாம் இவர்கள் கூட்டணிக்கான திட்டமிடல், என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications