பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!
இந்தியாவின் மிக முக்கியப் பெருநகரங்கள் பெங்களூர், ஹைதராபாத் தங்களின் உள்கட்டமைப்பு மற்றும் சர்வதேச வர்த்தகப் போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல பழைய விமான நிலையைத்து விட்டுவிட்டு பிரம்மாண்டமான புதிய விமான நிலையங்களை உருவாக்கியுள்ளனர். ஆனால் சென்னை மட்டும் வெறும் 1,283 ஏக்கருடன் முடங்கியுள்ளது.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாகத் திட்டமிடப்பட்ட 'பரந்தூர் விமான நிலையத் திட்டம்' தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

2வது விமான நிலையம் ரொம்ப முக்கியம்
இந்தியாவின் பிற முக்கியப் பெருநகரங்களுடன் ஒப்பிடும் போது சென்னையின் தற்போதைய நிலை என்ன, பரந்தூர் திட்டம் ஏன் தமிழகத்தின் 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது?
இந்தியாவின் முக்கியப் பெருநகரங்கள் தங்களின் பழைய, நெரிசல் மிகுந்த விமான நிலையங்களுக்கு மாற்றாகப் புதிய விமான நிலையங்களை அமைத்து முதலீடுகளை ஈர்த்து வருகின்றன. இந்த மாடல் வெற்றியும் கண்டுள்ளது.
ஹைதராபாத்
உதாரணமாக தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் முன்பு வெறும் 700 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே பழைய விமான நிலையம் இருந்தது. ஆனால், எதிர்காலத் தேவையைக் கணித்து அங்கு 5,500 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் (Rajiv Gandhi International Airport) உருவாக்கப்பட்டு தடையின்றிச் செயல்பட்டு வருகிறது.
மும்பை
இதேபோல், இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் தற்போதைய விமான நிலையம் 1,500 ஏக்கரில் மட்டுமே உள்ளதால், அங்கு நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 4,320 ஏக்கர் பரப்பளவில் 'நவி மும்பை சர்வதேச விமான நிலையம்' (Navi Mumbai International Airport) தற்போது அசுர வேகத்தில் கட்டப்பட்டு உல்ளது.
பெங்களூர்
ஐடி துறையின் மையமாக விளங்கும் கர்நாடகாவின் பெங்களூரு நகரில், முன்பு 865 ஏக்கர் கொண்ட 'எச்.ஏ.எல்' (HAL) விமான நிலையம் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 4,000 ஏக்கர் பரப்பளவில் உலகத் தரத்திலான 'கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம்' (Kempegowda Airport) அமைக்கப்பட்டுச் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இங்கு தற்போது T2 டெர்மினலும் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
டெல்லி
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள 'இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்' (Indira Gandhi International Airport) மட்டுமே ஒரேயொரு விமான நிலையம் கொண்டு இயங்குகிறது. ஆனால் இந்த தனி விமான நிலையமே 5,106 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு நாட்டின் மிகப்பெரிய விமான போக்குவரத்து மையமாகத் திகழ்கிறது.

சென்னையின் தற்போதைய நெருக்கடி
பிற மாநிலங்களின் பிரம்மாண்ட உள்கட்டமைப்புத் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போதுதான் சென்னையின் தற்போதைய அவலநிலை நமக்குத் தெளிவாகப் புரிகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம் வெறும் 1,283 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே அமைந்துள்ளது.
20 ஆண்டுகாலப் பின்னடைவு
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, விவசாய நிலங்களைப் பாதுகாக்க பரந்தூர் விமான நிலையத் திட்டப் பணிகளை நிறுத்திவிட்டு, ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட 1,700 ஏக்கர் நிலத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப் புதிய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளிவருகின்றன.
சாமானிய எளிய மக்களின் விவசாய நிலங்களைப் பாதுகாப்பது வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்தாலும், இந்த மெகா விமான நிலையத் திட்டத்தை முழுமையாகக் கைவிடுவது சென்னையை உள்கட்டமைப்பில் அடுத்த 20 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிவிடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
ஒரு சர்வதேச விமான நிலையம் என்பது வெறும் போக்குவரத்து வசதி மட்டுமல்ல, அது உலகளாவிய பன்னாட்டு நிறுவனங்களையும் (MNCs) பல்லாயிரக்கணக்கான கோடி முதலீடுகளையும் ஈர்க்கும் ஒரு பிரம்மாண்ட பொருளாதார நுழைவாயிலாகும்.
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமையாமல் போனால், மிகப்பெரிய வளர்ச்சி வாய்பை பெங்களூரு அல்லது ஹைதராபாத் கைப்பற்றிவிடும்.
பெங்களூரு, ஹைதராபாத்
அண்டை மாநிலங்கள் அனைத்தும் 4,000 முதல் 5,500 ஏக்கர் பரப்பளவில் மாபெரும் வான்வழி உள்கட்டமைப்பைத் தயார் செய்து முதலீட்டாளர்களைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் போது, சென்னை வெறும் 1,283 ஏக்கர் விமான நிலையத்துடன் மட்டுமே முடங்கிப் போனால், அடுத்த இரண்டு தசாப்த காலத்திற்கான உலகளாவிய முதலீடுகள் அனைத்தும் அண்டை மாநிலங்களுக்குத் தடையின்றிச் சென்றுவிடும்.
எனவே, சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், சென்னையின் 2வது விமான நிலையத் திட்டத்திற்கு மாற்று இடத்தையாவது கண்டறிந்து செயல்படுத்துவதே தமிழகத்தின் எதிர்காலத் தொழில் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
-
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை












Click it and Unblock the Notifications