ரூ.10 லட்சம் அபராதம் போதுமா? இல்லை 20 லட்சமாக உயர்த்தட்டுமா? CV சண்முகத்திடம் கேட்ட தலைமை நீதிபதி
சென்னை: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட பெயருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து அபராதம் விதித்தபோது குறுக்கிட்ட சி.வி.சண்முகம் தரப்பு வழக்கறிஞரிடம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் காட்டமாக கேள்வி எழுப்பினார். 10 லட்சம் ரூபாய் அபராதம் போடட்டுமா? இல்லை அதை 20 லட்சம் ரூபாயாக உயர்த்தட்டுமா? என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் அரசியல் கட்சிகள் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்த தடை கிடையாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பில் அதிமுக தரப்பிற்கும், மனுதாரர் எம்பி சிவி சண்முகம் தரப்பிற்கும் கிடுக்கிப்பிடி உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. அதோடு அரசியல் சண்டைகளை நீதிமன்றத்திற்கு கொண்டுவருவதை நீதிமன்றம் கண்டித்தது.

உங்களுடன் ஸ்டாலின் வழக்கு
இது போன்ற மனுக்கள் "சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு" சமம் என நீதிபதிகள் கூறினர். தலைவர்களின் பெயர்களை திட்டங்களுக்கு இடுவது நாடு முழுவதும் நிகழ்கிறது. ஒரு தலைவரை மட்டும் குறிவைத்து வழக்கு தொடுப்பது சரியல்ல என நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த நடைமுறை பாராட்டுக்குரியதல்ல என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
மனுதாரர் சி.வி. சண்முகத்திற்கு ₹10 லட்சம் அபராதம் விதித்தது. இந்தத் தொகை மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்பட வேண்டும். தமிழக அரசுக்கு நீதிமன்றம் இவ்விஷயத்தில் வழிகாட்டியது. உங்களுடன் ஸ்டாலின்' திட்ட பெயருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து அபராதம் விதித்தபோது குறுக்கிட்ட சி.வி.சண்முகம் தரப்பு வழக்கறிஞரிடம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய்.. 10 லட்சம் ரூபாய் அபராதம் போடட்டுமா? இல்லை அதை 20 லட்சம் ரூபாயாக உயர்த்தட்டுமா? என்று காட்டமாக கேள்வி எழுப்பினார். அதிமுகவும் சி.வி. சண்முகமும் இதனால் சங்கடமான நிலையை அடைந்தனர்.
உங்களுடன் ஸ்டாலின் - உச்ச நீதிமன்றத்தின் கண்டனம்
பொது நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டால் சி.வி. சண்முகம் தேசிய அளவில் வழக்கு தொடுக்கலாம். நாடு முழுவதும் உள்ள திட்டங்களை எதிர்த்து அவர் மனு செய்திருக்கலாம். ஆனால் ஒரு தலைவரை மட்டும் குறிவைத்தது உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. நீதிமன்றம் தனது தீர்ப்பில் இவ்விஷயத்தை தெளிவுபடுத்தியது.
அரசியல் சண்டைகள் தேர்தல் களத்திலேயே தீர்க்கப்பட வேண்டும். நீதிமன்றங்கள் இதற்காகப் பயன்படுத்தப்படக் கூடாது என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. விசாரணையின்போது நீதிபதி அதிமுக வழக்கறிஞரிடம், "முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் எத்தனை திட்டங்களுக்கு ஒரே ஒரு நபரின் பெயரை வைத்திருக்கிறீர்கள்?"
அதிமுக வழக்கறிஞர் "ஒன்று கூட இல்லை" என பதிலளித்தார். ஆனால் இந்த வாதம் பொய்யானது என திமுக தரப்பு மறுத்தது. அதிமுக ஆட்சியில் தலைவர்களின் பெயர்கள் திட்டங்களுக்கு சூட்டப்பட்டன. "புரட்சித் தலைவர்", "புரட்சித்தலைவி" "அம்மா" பெயர்களிலும் திட்டங்கள் இருந்தன. திமுக இதனை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது. "அம்மா என்பது யாருடைய தனிப்பட்ட பெயர் கிடையாது, அது ஒரு பொதுவான பெயர்" என அதிமுக வாதிட்டது.
திட்டங்களின் பெயர்கள் மற்றும் வரலாறு
இந்த வழக்கை தொடுத்த சி.வி. சண்முகம் மாநிலங்களவை உறுப்பினர். இவர் முந்தைய அதிமுக ஆட்சியில் மாநில அமைச்சராக பணியாற்றினார். முந்தைய அதிமுக ஆட்சியில் 22 திட்டங்கள் ஒருவரின் பெயரிலேயே இருந்தன. அமைச்சர் சி.வி. சண்முகம் காலத்தில் இது நடந்தது என அரசு கூறியது. ஜெயலலிதாவின் பெயர் பல திட்டங்களுக்கு சூட்டப்பட்டது என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதிட்டது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
"உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் ஜூலை 15 அன்று தொடங்கப்பட்டது. முதல்வர் மு.க. ஸ்டாலின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இதை தொடங்கி வைத்தார். மக்களின் தேவைகளை விரைந்து பூர்த்தி செய்ய இத்திட்டம் நோக்குகிறது. பொதுமக்கள் முகாம்களில் நேரடியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இது ஒரு முக்கிய அரசுத் திட்டமாக கருதப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்றம் முன்பு தலைவர்களின் பெயர்கள், படங்களுக்கு தடை விதித்தது. "உங்களுடன் ஸ்டாலின்" போன்ற திட்டங்களை சி.வி. சண்முகம் எதிர்த்ததால் இந்த தடை விதிக்கப்பட்டது தமிழக அரசு உயர் நீதிமன்றத்தின் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. நீதிமன்றம் மாநில அரசின் நிலைப்பாட்டை அங்கீகரித்துள்ளது.
தலைவர்களின் பெயர்களை திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. நீதிமன்றங்கள் அரசியல் சண்டைகளில் ஈடுபடக்கூடாது என்பதை இது மீண்டும் வலியுறுத்துகிறது. இந்தத் தீர்ப்பு இதுபோன்ற எதிர்கால வழக்குகளுக்கு ஒரு வழிகாட்டியை அமைக்கிறது.












Click it and Unblock the Notifications