அந்த ஷூ மேட்டர்! திரிஷா தொடர்பாக தீயாய் பரவிய செய்தி.. விஜய் சூசகமாக சொன்ன பதில்! கவனிச்சீங்களா?
சென்னை: நடிகர் மற்றும் தமிழக முன்னேற்றக் கட்சி தலைவர் விஜய் இன்று சமூக வலைத்தளங்கள் பற்றி பேசினார். இதில் திரிஷா பற்றிய விவகாரம் குறித்தும் சூசகமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய்க்கு சங்கீதா என்ற மனைவி இருக்கிறார். அவருக்கு சஞ்சய் என்ற 20 வயது கடந்த மகன் இருக்கிறார். அவர் சினிமா இயக்க முயன்று வருகிறார். இப்போது பரவும் கிசுகிசு என்னவென்றால் நடிகர் விஜயுடன் நடிகை திரிஷா காதலில் இருக்கிறார் என்பதே.. இதை யாரும் உறுதிப்படுத்தவும் இல்லை. மறுக்கவும் இல்லை. இதெல்லாம் கில்லி, குருவி படத்தில் இருந்தே பேசப்படும் விஷயம்தான்.

சர்ச்சையான விஷயம்: அதெல்லாம் சரி இப்போது ஏன் இதை பற்றி பேசுகிறீர்கள் என்றால் அதற்கு சில காரணங்கள் உள்ளன. நெட்டிசன்கள் கண்டுபிடித்த காரணங்கள் அவை. திரிஷா நேற்று விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னார். அதற்கு இன்ஸ்டாவில் அவர் ஒரு ஆங்கில காதல் பாடல் போட.. அதில் நீதான் என் காதல்.. என் உயிர் பிரியும் வரை நீதான் என் காதல் என்றெல்லாம் ஆங்கிலத்தில் வரிகள் வருகின்றன.
திரிஷாவின் பழைய படங்களை நெட்டிசன்கள் தோண்ட.. அதில் பல போட்டோக்களில் விஜயின் ஷூ தெரிகிறது. அதாவது அதே காலகட்டத்தில் விஜய் பயணம் செய்த போது அணிந்த அதே கருப்பு வெள்ளை ஷூவை.. அதே மாடலை திரிஷா போட்டோவில் இருக்கும் கால் ஒன்றும் போட்டு உள்ளது. இதெல்லாம் போக திரிஷா இருந்த பயண லொகேஷன்களில் விஜயும் இருந்தது சில போட்டோக்கள் மூலம் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.
விஜய் பதிலடி: இப்படிப்பட்ட நிலையில்தான் இன்று நடிகர் மற்றும் தமிழக முன்னேற்றக் கட்சி தலைவர் விஜய் இன்று சமூக வலைத்தளங்கள் பற்றி பேசினார். இதில் திரிஷா பற்றிய விவகாரம் குறித்தும் சூசகமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது
திருவான்மியூரில் மாணவர்களை சந்தித்த விஜய் பேசுகையில் , போதைப்பொருள் பயன்பாடு அச்சமூட்டுகிறது. தமிழகத்தில் போதை பொருட்கள் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகமாகிவிட்டது; ஒரு பெற்றோர் என்ற முறையிலும், அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையிலும் எனக்கு அச்சமாக உள்ளது.
சோஷியல் மீடியாவில் சிலர் புறணி பேசுகிறார்கள்; அதை எல்லாம் கவனத்தில் கொள்ளாதீர்கள். நல்லவர்களை கெட்டவர்கள் போலவும், கெட்டவர்களை நல்லவர்கள் போலவும் சித்தரிக்கிறார்கள்; வரும் செய்திகளில் எது உண்மை, எது பொய் என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
தலைவர்கள் இல்லை: நம்மிடம் எல்லாம் இருக்கிறது . நமக்கு தேவையான எல்லாம் இருக்கிறது. ஆனால் நம்மிடம் நல்ல தலைவன்தான் இல்லை. வாழ்க்கையில் என்னவாகப் போகிறோம் என்கிற தெளிவான எண்ணம் சிலருக்கு இருக்கும். சிலருக்கோ வாழ்க்கையில் அடுத்து என்ன என்பதில் முடிவெடுப்பதில் சிரமம் இருக்கும். அப்படியானவர்கள் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். எல்லா துறையுமே நல்ல துறைதான். நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் கடினமாக உழையுங்கள். வெற்றி உங்களைத் தேடி வரும்.
போதைப்பொருள் பயன்பாடு அச்சமூட்டுகிறது. தமிழகத்தில் போதை பொருட்கள் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகமாகிவிட்டது. ஒரு பெற்றோர் என்ற முறையிலும், அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையிலும் எனக்கு அச்சமாக உள்ளது.
எல்லா துறையுமே நல்ல துறைதான். நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் முழு ஈடுபாட்டோடு 100% உழைப்பை போட்டால் வெற்றி நிச்சயம். அதனால் உங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுங்கள். Say NO to temporary pleasures. Say NO to drugs என்று மாணவர்கள் மத்தியில் விஜய் உரையாற்றினார்.
விளக்கம்; சோஷியல் மீடியாவில் சிலர் புறணி பேசுகிறார்கள்; அதை எல்லாம் கவனத்தில் கொள்ளாதீர்கள். நல்லவர்களை கெட்டவர்கள் போலவும், கெட்டவர்களை நல்லவர்கள் போலவும் சித்தரிக்கிறார்கள்; வரும் செய்திகளில் எது உண்மை, எது பொய் என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும், என்று விஜய் கூறியது தன்னை பற்றி பரவிய வதந்திதான் காரணம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications