முதல்வராகும் விஜய்? தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த உடனே.. வீட்டிற்கு வந்த ராட்சச மெஷின்.. ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய திருப்பத்தை 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தி வருகின்றன. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK), தனது முதல் தேர்தலிலேயே திராவிடப் பேரியக்கங்களுக்குச் சவால் விடும் வகையில் முன்னிலை பெற்று வருவது அரசியல் களத்தை அதிரவைத்துள்ளது.

தமிழகத் தேர்தல் 2026: தவெக-வின் விஸ்வரூபம்

இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் 107 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஆளுங்கட்சியான திமுக 72 இடங்களிலும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 55 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன. தனித்துப் போட்டியிட்ட விஜய், திராவிடக் கோட்டைகளாகக் கருதப்பட்ட பல தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவது அரசியல் நோக்கர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Is Vijay the Next CM TVK Leads in 100 plus Amid Unprecedented Security at Vijay s Home

விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அவர் தலா 26 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதே சமயம், கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தோல்வியை சந்தித்து இருப்பது திமுக வட்டாரத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் இல்லத்தில் பலத்த பாதுகாப்பு: பாடி ஸ்கேன் மெஷின் வருகை

தேர்தல் முடிவுகள் விஜய்க்குச் சாதகமாகத் திரும்புவதைத் தொடர்ந்து, அவர் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது. தவெகவிற்கு 118 என்ற தனி மெஜாரிட்டி இல்லை என்றாலும் 107 இடங்கள் என்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளார். இதன் காரணமாக, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன.

இதையடுத்து விஜயின் இல்லத்தில் பாடி ஸ்கேன் (Body Scan) இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் அங்கே பாடி ஸ்கேன் (Body Scan) இயந்திரம் இல்லை. சற்று முன் பாடி ஸ்கேன் (Body Scan) இயந்திரம் அவரின் வீட்டில் பொருத்தப்பட்டு உள்ளது.

உயர்மட்டப் பாதுகாப்பு: இனி அவரது வீட்டிற்குச் செல்பவர்கள் எவராயினும், இந்த இயந்திரத்தின் பரிசோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

புதிய கட்டுப்பாடு: முக்கிய நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என அனைவரும் இந்தப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

காரணம்: தவெகவின் வெற்றி வாய்ப்பு உறுதியாகி வருவதால், விஜய்யின் பாதுகாப்பு நலன் கருதி இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

முடிவடையாத வாக்கு எண்ணிக்கை: பரபரப்பில் தமிழகம்

வாக்கு எண்ணிக்கை இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என்றாலும், தற்போதைய நிலவரம் தமிழகத்தில் ஒரு "அரசியல் மாற்றத்தை" நோக்கிச் செல்வதைக் காட்டுகிறது. 118 இடங்களை எட்டும் கட்சி ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில், தவெக பெரும்பான்மையை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

சென்னைப் பகுதிகளில் தவெக மிக பலமாக இருப்பதை முன்னணி நிலவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, எழும்பூர் போன்ற தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

தொண்டர்களின் கொண்டாட்டம்

தமிழகம் முழுவதும் உள்ள தவெக அலுவலகங்களில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். "முதலமைச்சர் விஜய்" என்ற முழக்கங்கள் தவெக அலுவலகங்கள் முழுவதும் எதிரொலிக்கின்றன. விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா சந்திரசேகர் ஆகியோர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும், முழுமையான முடிவுகள் வெளியாக இன்னும் சில மணிநேரங்கள் ஆகும் என்பதால், அரசியல் களம் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறது. திராவிட கட்சிகளின் 50 ஆண்டு கால ஆதிக்கத்தை விஜய் முறியடிப்பாரா என்பது இன்று மாலைக்குள் தெளிவாகத் தெரியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+