அரசு பேருந்தில் வந்த எமன்! சென்னை அம்பத்தூரில் பைக்கில் சென்ற ஐடி பெண் ஊழியர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அம்பத்தூரில் ஸ்கூட்டரில் பணிக்குச் சென்ற ஐடி ஊழியர் பூர்ணிமா (25) விபத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து அம்பத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் பூர்ணிமா (25). இவர் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் தினமும் பணிக்காக இரு சக்கர வாகனத்தில் செல்வாராம்.

அந்த வகையில் வார விடுமுறை முடிந்து இன்று திங்கள் காலை பணிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அம்பத்தூர் அருகே திடீரென பிரேக் பிடித்த போது சறுக்கி விழுந்தார்.
இதில் பின்னால் வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியது. இதில் அவர் உயிரிழந்தார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications