பாஜக கூறும் நதிகள் இணைப்பு சாத்தியமில்லை.. கே.எஸ். அழகிரி கருத்து
சென்னை: பணத்தை அள்ளி வீசி வேட்பாளர்களுக்கு மக்கள் ஆரத்தி எடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள வேட்பாளர்களை ஆதரித்து கே.எஸ். அழகிரி மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேனியில் வாக்காளர்களுக்கு அதிகப் பணம் வழங்கி வருவதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்றார்.

பாஜக தேர்தல் அறிக்கையில், நதிகள் இணைக்கப்படும் என கூறப்பட்டுள்ளதற்கு, நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளது குறித்து கேட்ட கேள்விக்கு, பல மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிகளை இணைப்பது என்பது சாத்தியமில்லை என்று கே .எஸ். அழகிரி பதில் அளித்தார்.
மேலும், ஜிஎஸ்டி முரண்பாடு சரி செய்யப்படும் என மோடி இப்போது சொல்வது வேடிக்கையாக உள்ளது என்றும் அவர் விமர்சனம் செய்தார். பணமதிப்பிழப்பு உள்ளிட்ட திட்டங்களை முறையாக திட்டமிடாமல் அறிவித்தது பாஜக அரசு என்றும் அவர் குற்றம் சாட்டினார்
முன்னதாக, பா.ஜ.க-வினர் ஒருபோதும் ராமர்கோயில் கட்டமாட்டார்கள், கட்டினால் பா.ஜ.க. முடிந்துவிடும் என்றும், நாங்கள் ராமர் கோயில் கட்டுவோம் எனவும் கே.எஸ். அழகிரி தெரிவித்தார். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications