“மாஸ்டரையே” பிடித்த ஐடி.. சிக்கலில் தமிழ் சினிமா! படப்பிடிப்புகள் முடங்கும் நிலை -தவிப்பில் “தலைகள்”
சென்னை: தமிழ் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் தயாரிப்பாளர்கள் இல்லங்களில் நடந்து வரும் வருமான வரித்துறை சோதனையால் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் முடங்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video
மதுரை அன்பு என்று அழைக்கப்படும் பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தமிழ் மட்டுமின்றி இந்திய அளவிலான சினிமாக்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் அன்புச்செழியனிடமே கடன் பெற்று திரைப்படங்களை தயாரித்து வருகின்றன.
இந்த நிலையில்தான் 2வது நாளாக அன்புவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று அதிகாலை 5:30 மணி முதல் சென்னை, மதுரையில் உள்ள அன்புச்செழியனின் வீடு, அலுவலகங்கள், சைதாப்பேட்டையில் உள்ள திரையரங்கம், மதுரையில் உள்ள திரையரங்கம் என பல இடங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தயாரிப்பாளர்கள்
இதேபோல், முன்னணி தயாரிப்பாளர்களான சத்யஜோதி தயாரிப்பு நிறுவன தலைவர் தியாகராஜன், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தலைவர் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ், ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவன தலைவர் ஞானவேல் ராஜா, வி கிரியேசன்ஸ் தயாரிப்பு நிறுவன தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா உள்ளிட்டோரின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டது.

20 தயாரிப்பாளர்கள்
இதுகுறித்து பிரபல சினிமா பத்திரிகையாள பிஸ்மி தெரிவிக்கையில், "மதுரை அன்பு வீட்டுக்கு வருமான வரித்துறை முன்பு சோதனை மேற்கொண்டபோது, எந்தெந்த தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என்ற கணக்கு சிக்கியது. ஆனால், அந்த தயாரிப்பாளர்களிடம் அன்புச்செழியனிடம் பணம் வாங்கியதற்கான எந்த கணக்கும் இல்லை. எனவே வருமான வரித்துறை சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களிடம் இதுகுறித்து விளக்கம்கோரி நோட்டீஸ் அனுப்பியது.

நடிகர் தனுஷ்
ஆனால், மதுரை அன்பு அந்த தயாரிப்பாளர்களிடம் தான் சொல்வதைபோல் பதிலளிக்குமாறு அறிவுறுத்தினாராம். இவர்கள் பதிலே கொடுக்காமல் இருந்ததால் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருக்கலாம் என்று நினைக்கிறேன். நமக்கு கிடைத்த தகவலின்படி 20 முன்னணி தயாரிப்பாளர்கள் இந்த வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளாக இருக்கிறார்கள். இதில் நடிகர் தனுஷும் அடக்கம்." என்றார்.

முக்கிய நடிகர்கள்
இதில் தற்போது சோதனை நடத்தப்பட்டு வரும் தயாரிப்பு நிறுவனங்களே தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களாக திகழ்பவை. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக திகழும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, கார்த்தி, ஆர்யா என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை இந்த தயாரிப்பாளர்களே தயாரித்து உள்ளனர். தயாரித்தும் வருகின்றனர்.

வலைப்பின்னல்
இந்த நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களை தயாரிக்கும் வேறு நிறுவனங்களும் மதுரை அன்புவிடம் நிதி பெற்றவர்களாக இருக்கலாம். இப்படி ஏதாவது ஒருவகையில் இதில் பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் இவர்களுடன் தொடர்பில் இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. இப்படி ஒரு வலைப்பின்னலாகவே தமிழ் சினிமாவின் நிதி ஆதாரம் இருக்கிறது. அதிமுகவில் அங்கம் வகித்தாலும் அனைத்து கட்சியினருடன் நெருக்கம் பாராடும் மதுரை அன்புவின் இல்ல திருமண விழாவில் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து கட்சி பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

மதுரை அன்பு
சினிமாவுக்கு பைனான்ஸ் செய்வது மட்டுமின்றி கோபுரம் சினிமாஸ் என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களையும் தயாரித்து வந்த இவர், சொந்தமான திரையரங்கத்தையும் நடத்தி வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் சசிகுமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக் குமாரின் தற்கொலைக்கு மதுரை அன்புவே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத மாஸ்டராக இருந்து வரும் அன்புச்செழியன் மற்றும் மூத்த தயாரிப்பாளர்களுக்கு தொடர்புடைய இடங்களில் நடக்கும் ஐடி சோதனையால் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் முடங்கும் நிலையும் ஏற்படலாம்.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications