தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் -சென்னை வானிலை மையம்
சென்னை: கோவை, நீலகிரி, உட்பட தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக இந்த மழைபெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில்,

காற்றின் திசைவேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை செவ்வாய்கிழமையும் நாளை மறுதினம் புதன்கிழமையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் இதர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனிடையே கடந்த ஒரு வாரமாகவே வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் சென்னையை பொறுத்தவரை கனமழைக்கு வாய்ப்பில்லை என்றும் லேசான மழை மட்டுமே பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications