இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஏணி சின்னம்.. தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!
சென்னை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஏணி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
இந்தியன் முஸ்லீம் லீக் கேரளாவை அடிப்படையாக கொண்ட ஒரு கட்சியாகும். இது இந்திய தேர்தல் ஆணையத்தால் கேரளாவில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்சியின் தலைவராக கே.எம்.காதர் மொய்தீன் உள்ளார். இந்திய முஸ்லீம் லீக் கட்சி வரும் மக்களவை தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் உள்ள இக் கட்சி சார்பில் நவாஸ் கனி போட்டியிடுகிறார்.
தங்களுக்கு ஏணி சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் ஐயூஎம்எல் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது. அதனை ஏற்ற தேர்தல் ஆணையம் அவர்களுக்கு ஏணி சின்னத்தை ஒதுக்கீடு செய்தது. கடந்த முறையும் ஏணி சின்னத்தில் போட்டியிட்டு நவாஸ் கனி வெற்றி பெற்றார்.
அவர் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனைவிட 1.27 லட்சம் வாக்குகளை அதிகம் பெற்று வென்றார். இந்த முறையும் ஏணி சின்னம் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications