சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Jacto Geo: நடவடிக்கை தொடங்கியது.. 377 ஜாக்டோ-ஜியோ ஊழியர்களுக்கு அரசு அதிரடி நோட்டீஸ்

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுப்பட்டு இருக்கும் 377 அரசு ஊழியர்களுக்கு அதிரடி நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுப்பட்டு இருக்கும் 377 அரசு ஊழியர்களுக்கு அதிரடி நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.

ஜாக்டோ ஜியோ போராட்டம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் தலையிட முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ள நிலையில் போராட்டம் வேகம் எடுத்து இருக்கிறது.

Jacto Geo protest: Government sent notices to 377 workers in Cuddalore

இடைநிலை ஆசிரியர்கள் எல்லோரும் கடந்த ஜனவரி 22ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். 9 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடந்து வருகிறது.

இந்த போராட்டத்திற்கு இன்னும் வேறு சில அரசு ஊழியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக தற்போது முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி கடலூரில் போராட்டத்தில் ஈடுபட்ட 377 அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. இவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு 17b குறிப்பாணை வழங்கப்பட்டது

அரசு உத்தரவிட்டதையடுத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது கடலூர் மாவட்ட நிர்வாகம். இவர்கள் மீது உடனடியாக பணி நீக்கம், சம்பள பிடித்தம், அலுவலக நடவடிக்கை உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது.

இவர்களை தொடர்ந்து இன்னும் சில ஊழியர்களுக்கு வரிசையாக நோட்டீஸ் அனுப்பப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

English summary
Jacto Geo: Government sent notices to 377 workers in Cuddalore who appeared for protest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X