அரசுடன் பேச்சுவார்த்தை தோல்வி.. திட்டமிட்டபடி ஜன.6 முதல் போராட்டம்.. ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
சென்னை: வரும் ஜனவரி 6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் செய்ய உள்ளதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. இன்று சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஜாக்டோ ஜியோ எனப்படும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர், பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும், காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் குழுவுடன் ஜாக்டோ ஜியோ அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் திட்டமிட்டபடி அதாவது ஜனவரி 6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று ஜாக்டோ ஜியோ தெரிவித்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications