பழனிசாமி பற்றவைத்த தீ.. மயிலாடுதுறையில் சூர்யா படம் நிறுத்தம்! தியேட்டருக்கு விரைந்த போலீஸ்! பதற்றம்
நடிகர் சூர்யா மீது மயிலாடுதுறை பாமகவினர் போலீசில் புகார் தந்துள்ளனர்
சென்னை: நடிகர் சூர்யா மீது நடவடிக்கை வேண்டும் என்று கோரி பாமவினர் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.. இதனிடையே, சூர்யாவை தாக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்சம் பரிசு என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் அறிவித்ததையடுத்து, "WestandWithSuriya" என்ற ஹேஷ்டேக்கை சூர்யா ரசிகர்கள் டிரெண்டாக்கி ட்விட்டரை பரபரப்புக்கு உள்ளாக்கி வருகின்றனர்.
Recommended Video
சூர்யாவின் ஜெய்பீம் பட சர்ச்சை இன்னும் ஓயவில்லை.. படத்தின் ஒரு காட்சியில் இடம்பெற்ற காலண்டர் மூலம் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்திருப்பதாக சர்ச்சை வெடித்தது.
இதனையடுத்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், சூர்யாவுக்கு 9 கேள்விகள் எழுப்பி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்... இதற்கு சூர்யாவும் விளக்கம் தந்து பதில் அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

புகார்
ஆனாலும் இன்னும் விவகாரம் சுற்றி கொண்டே இருக்கிறது.. தொடர்ந்து ஜெய் பீம் படத்திற்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்... இந்நிலையில்தான் "நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி நேற்றைய தினம் பேசியிருந்தது சர்ச்சையை கிளப்பியது.

தியேட்டர்
"ஜாதி கலவரத்தை தூண்டும் வகையிலும், வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்திய சூர்யாவை மயிலாடுதுறை பகுதியில் நடமாடவிட மாட்டோம்... இந்த பக்கம் எந்த தியேட்டரிலும் அவரது படத்தை திரையிட விடமாட்டோம்... இது தமிழ்நாட்டின் அனைத்து இடங்களில் நடைபெறும்... இனி சூர்யா, ஃபிளைட்டில் தமிழ்நாட்டினுள் சுற்ற வேண்டும்... சாலை வழியில் போக முடியாது என்பதை எச்சரிக்கையாக சொல்லி கொள்கிறோம்..

அறிவிப்பு
ஜாதிகலவரத்தை தூண்டும் வகையிலும், வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்திய நடிகர் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் சூர்யாவை தாக்கும் இளைஞர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட பாமக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும்" என்று அதிரடியாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு பெரும் அதிர்வலையை நேற்றைய தினம் ஏற்படுத்தியிருந்தது.. இப்படி ஒரு தகவல் அறிந்ததுமே மயிலாடுதுறை போலீசார், தியேட்டருக்கு விரைந்து சென்று திரைப்பட காட்சியை நடத்த சொன்னார்கள்.. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து நாங்கள் படத்தை மாற்றிகொள்கிறோம் என்றுகூறி, காட்சிகளையே ரத்து செய்துவிட்டனர்.

குற்றவாளி
இதனிடையே, மயிலாடுதுறை மாவட்ட எஸ்பியிடம் சுகுணாசிங்கிடம் பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி தலைமையில் பாமவினர் ஜெய்பீம் தயாரிப்பாளர், இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனுஅளித்தார்.. அந்த மனுவில் உள்ள சுருக்கம் இதுதான்: "படத்தில் ஒரு குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் தங்கள் குலத்தின் அடையாளமான அக்னிகுண்டத்தை காட்டியும், மறைந்த வன்னியர் சங்கத்தலைவர் காடுவெட்டி குரு பெயரை அந்த வில்லனுக்கு வைத்து அவரது புகழுக்கும் மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

ஜெய்பீம்
வன்னிய சமுதாய மக்கள் அனைத்து சமுதாய மக்களுடன் இணக்கமாக பழகிவரும் வேலையில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிற சமுதாயத்தினருக்கு எதிராக வன்னியர்கள் செயல்படுவதுபோல் மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்துவதுபோல் படத்தை எடுத்துள்ளனர். எனவே ஜெய்பீம் பட தயாரிப்பாளர்களான சூர்யா, ஜோதிகா இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹேஷ்டேக்
நடிகர் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் அவரை தாக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்ற மயிலாடுதுறை மாவட்ட பாமக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதை சூர்யாவின் ரசிகர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர்.. இதையடுத்து, "WestandWithSuriya" என்ற ஹேஷ்டேக் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.. சூர்யாவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் ட்விட்டரை ஆக்கிரமித்து வருகிறார்கள்.. ஒருபக்கம் சூர்யா மீது போலீசில் புகார், மற்றொரு பக்கம் சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் பரிசு, இதற்கு நடுவில் வைரலாகும் ஹேஷ்டேக் என பெரும் பரபரப்பு சூழ்ந்து வருகிறது.
-
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications