Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“மிஸ்டேக்” இருக்கு.. கண்டுபிடித்த ஜேம்ஸ் வசந்தன்! அரசு ஜல்லிக்கட்டு மைதான பெயர் பலகையில் பிழையாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரையில் அமைக்கப்பட்டு உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டு உள்ள பெயரில் எழுத்துப் பிழை உள்ளதாக குற்றம்சாட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். அப்படி என்ன பிழை அதில் உள்ளது? விரிவாக பார்ப்போம்.

இதுகுறித்து பேஸ்புக்கில் அவர் வெளியிட்டு உள்ள பதிவில், "மதுரையில் வருகிற 24 ஆம் தேதியன்று திறக்கப்பட இருக்கும் ஜல்லிக்கட்டு அரங்கம் தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல்தான். நேற்று அதைப் பற்றிய ஒரு தொகுப்பை தொலைக்காட்சியில் பார்த்தேன். அரங்கத்தின் நுழைவாயிலில் தமிழிலும் இங்லிஷிலும் "ஏறு தழுவுதல்" என்று பொறித்திருப்பதைக் கண்டேன். இங்லிஷில் எழுதப்பட்டிருப்பது பிழையாக உள்ளது. "AERUTHAZHUVUDHAL" என்றிருக்கிறது. தமிழில், "ஏறு தழுவுதல்" என்கிற சொல்லில் "ஏ" என்கிற முதலெழுத்து உயிரெழுத்தாக இருப்பினும் அது உயிர்மெய் ஒலியாகத்தான் (யே) உச்சரிக்கப்படுகிறது.

 James Vasanthan mentioned mistake in the Madurai Jallikattu gallery

அந்த அடிப்படையில் இது "YERU..." என்றே எழுதப்பட வேண்டும். இங்லிஷில் எழுதுவதன் நோக்கமே தமிழ் தெரியாதவர்க்கு உதவத்தான். இப்போது எழுதப்பட்டிருக்கும் விதத்தில் வாசித்தால் வெளிநாட்டவர் இதை "AEROPLANE" உச்சரிப்பதைப் போல தொண்டையிலிருந்து உயிரெழுத்தாக உச்சரிப்பார்கள். இரண்டாவது பிழை தீரா விவாதமான "ழு" ஒலி. வெளிநாட்டவர் "AERUTHAZHUVUDHAL" என்பதை "ஆறுதஸுவுதல்" என்றே வாசிப்பார்கள். "YERUTHALUVUDHAL" என்று எழுதினால் "ஏறுதலுவுதல்" என சரியான உச்சரிப்புக்கு அருகில் வர உதவும். பிடிவாதம் பிடிக்காமல் இதைச் சரிசெய்வது மொழியின் நலம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022ஆம் ஆண்டு மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என உறுதியளித்தார். அதன் தொடர்ச்சியாக மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் ரூ.44 கோடி செலவில் 67 ஏக்கர் பரப்பளவில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தற்போது பணிகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில், 5,000 க்கும் அதிகமானோர் அமர்ந்து ஜல்லிக்கட்டை கண்டு ரசிக்கும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டு இருக்கிறது. கிரிக்கெட் மைதானத்துக்கு இணையாக 3 தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கில் பார்வையாளர் மாடங்கள் பாதுகாப்பான முறையில் பாரம்பரியம் கலந்த நவீன தொழில்நுட்ப வடிவமைப்புடன் அமைக்கப்பட்டன.

 James Vasanthan mentioned mistake in the Madurai Jallikattu gallery

இதன் தரைத்தளத்தில் வாடிவாசல், மாடுபிடி வீரர்களுக்கான இடம், நிர்வாக அலுவலகம், அருங்காட்சியகம் போன்றவை உள்ளன. முதல் தளத்தில் விருந்தினர்கள் அமரும் அறை மற்றும் தங்கும் அறைகள், உணவு அறைகள் உள்ளன. 2 ஆம் தளத்தில் உபகரணங்கள் வைப்பறை உள்ளது. 3 ஆம் தளத்தில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானம் என பெயர் வைக்கப்பட்டு உள்ள நிலையில் அதன் ஆங்கில பலகையில் பிழை இருப்பதாகவே ஜேம்ஸ் வசந்தன் சுட்டிக் காட்டி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+