முஸ்லீம் எம்.பிக்களுக்கே பாதுகாப்பு இல்லை.. பாஜக நாடி நரம்பு பூரா வெறுப்பு.. ஜவாஜிருல்லா கொதிப்பு!
சென்னை: நாடாளுமன்றத்திற்குள் இருக்கும் முஸ்லிம் எம்.பி.க்களுக்கே பாதுகாப்பு இல்லை என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் சந்திரயான் -3 குறித்த விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலியை பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி தீவிரவாதி என விமர்சித்தார். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. ரமேஷ் பிதூரியின் பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதால் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டது.

இதுதொடர்பாக ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், "சந்திரயான் விண்கலத்தின் வெற்றி குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பாஜக உறுப்பினர் ரமேஷ் பிதுரி என்பவர் பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினர் டேனிஷ் அலியை நோக்கி மிக அருவருப்பான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது குறிப்பிட்ட முஸ்லிம் எம்.பி மீது மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீது உமிழப்பட்டுள்ள வெறுப்புரையாகும்.
ரமேஷ் பிதுரியின் வெறுப்புப் பேச்சு பாஜகவினரின் நாடி நரம்புகளில் இணைந்திருக்கும் முஸ்லிம் வெறுப்புணர்வின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது. நாடாளுமன்றத்திற்குள் இருக்கும் முஸ்லிம் எம்.பி.க்களுக்கே பாதுகாப்பு இல்லை என்பதை இந்த பேச்சு எடுத்து காட்டியுள்ளது. பிதுரியின் உரை ஆச்சரியத்தைத் தரவில்லை. வி டி சாவர்க்கரைப் பின்பற்றுபவர்களின்மனநிலை இப்படியே இருக்கும் என்பதற்கு இந்த உரை மற்றொரு எடுத்துக்காட்டாகும்.

வெறுப்புணர்வைத் தூண்டும் பாஜக எம்.பி மீது இது வரை பாஜக தலைமையோ மக்களவை சபாநாயகரோ நடவடிக்கை எடுக்காததும் ஆச்சரியத்தைத் தரவில்லை. நாடாளுமன்றத்தில் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி உள்ளிட்டோர் மீது பாய்ந்த நடவடிக்கை ரமேஷ் பிதூரி மீது ஏன் பாயவில்லை?
புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்குள் பாஜகவினர் இனி எவ்வாறு தரம் தாழ்ந்து நடப்பார்கள் என்பதற்கு இது தொடக்கப்புள்ளியோ என்று எண்ண வேண்டியுள்ளது. ரமேஷ் பிதூரி மீது கடும் நடவடிக்கை எடுக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் மேலும் கடுமையாகக் கண்டனம் தெரிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications