தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: இலங்கை கடற்படைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
சென்னை : இலங்கை கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்களை குறிவைத்து பீரங்கி தாக்குதல் நடத்தியதற்கு முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

வங்கக்கடலில் கச்சத்தீவு அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர் அதிரஷ்டவசமாக 9 மீனவர்களும் காயமின்றி உயிர் தப்பி விட்டாலும் அவர்களின் படகு சேதமடைந்து விட்டது.
இலங்கை படையினரின் இந்த செயலை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று இந்திய அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக ஜெயக்குமார் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், இன்று பாம்பனில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை இதுவரை இல்லா நிகழ்வாக பீரங்கித் தாக்குதல் நடத்தியது பெரும் கண்டனத்திற்குரியது. இதில் 3 விசைப்படகுகள் சேதமடைந்துள்ளன.இனி இதுபோன்று நடைபெறா வண்ணம் மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications