"அதை" மறக்க முடியுமா?.. துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ்.. நமது அம்மாவிலிருந்து நீக்கம் ஏன்? ஜெயக்குமார்
சென்னை: அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழில் ஓபிஎஸ் பெயர் நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
அதிமுக தலைமை கழக நிர்வாக குழு கூட்டம் இன்று எம்ஜிஆர் மாளிகையில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ்ஸின் பொருளாளர் பதவி பறிக்கப்படலாம் என சொல்லப்பட்டது.

இதையடுத்து பொருளாளர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிகள் யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் முடிந்த பிறகு ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் அதிமுகவின் நாளிதழான நமது அம்மாவில் இருந்து ஓபிஎஸ் பெயர் நீக்கம் ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஜெயக்குமார் பதில் அளிக்கையில் அதிமுகவுக்கு பல துரோகங்களை ஓபிஎஸ் செய்துள்ளார். அவர் துரோகத்தின் அடையாளம்.
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அர்ப்பணிப்பு உணர்வுடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தை மறக்க முடியுமா. இவர்களின் துரோகத்தை தொண்டர்கள் பார்த்து்க கொண்டுதான் இருக்கிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications