சாத்தான்குளம் சம்பவம்.. புட்டத்தில் தோல்களே இல்லை.. ஆசனவாயில் பெரிய காயம்.. உறவினர்கள் கதறல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயராஜையும் பென்னிக்ஸையும் நாங்கள் ஜாமீனில் எடுத்திருந்தாலும் அவர்களுக்கு ஏற்பட்டிருந்த காயத்தை பார்க்கும் போது அவர்களை காப்பாற்றியிருக்க முடியாது என பிரேத பரிசோதனையை நேரில் பார்த்த உறவினர்கள் கூறினர்.

சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்தவர்கள் ஜெயராஜ். அவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் ஊரடங்கு நேரத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட தங்களது கடையை திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் இருவரும் கடந்த 19-ஆம் தேதி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தனர். அவர்கள் உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டதாக போலீஸ் தரப்பும், இருவரையும் கொடுமைப்படுத்தியே கொன்றதாக ஜெயராஜ், பென்னிக்ஸ் உறவினர்களும் குற்றம்சாட்டினர்.

உறவினர்கள்

உறவினர்கள்

இந்த நிலையில் இவர்களது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்களது பிரேத பரிசோதனை வீடியோவாக எடுக்கப்பட்டது. அப்போது கோவில்பட்டி மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனையை மாஜிஸ்திரேட்டுடன் ஜெயராஜின் மைத்துனர் தாவீத், வினோத், ஓம்சேகர் ஆகியோர் பார்வையிட்டனர்.

ஆசனவாய் பகுதி

ஆசனவாய் பகுதி

அவர்கள் கூறுகையில் முதலில் பென்னிக்ஸின் உடல் ஆய்வு செய்யப்பட்டது. அவரது காலில் இருந்த காயங்களை பார்த்த போது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தன. அது போல் பாதங்களிலும் காயங்கள் இருந்தன. நாங்கள் உடல் முழுவதும் பார்த்த போது அனைத்து இடங்களிலும் காயங்கள் இருந்தன. பிட்டத்தின் பகுதியில் தோல்களே இல்லை. அது போல் அவரது ஆசனவாய் பகுதியிலும் காயங்கள் இருந்தன.

ஜெயராஜின் உடல்

ஜெயராஜின் உடல்

அது போல் இரு கைகளிலும் காயங்கள் இருந்தன. அவரது ஆசனவாய் பகுதியில் காயம் இருந்தது என நாங்கள் கூறிய போது அவர்கள் பென்னிக்ஸின் கால்களை விரித்து பார்த்தனர். அப்போது அந்த இடத்தில் இரு பெரிய காயங்கள் இருந்தன. இதைத் தொடர்ந்து ஜெயராஜின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடலிலும் பென்னிக்ஸை போலவே காயங்கள் இருந்தன.

மாஜிஸ்திரேட்

மாஜிஸ்திரேட்

நாங்கள் அவர்களை ஜாமீனில் எடுத்திருந்தாலும் இந்த காயங்களை வைத்து அவர்களை காப்பாற்றியிருக்க முடிந்திருக்காது. அந்த அளவுக்கு கடுமையாக காயங்கள். போலீஸ் நிலையத்தில் அவர்களை பார்த்தது முதல் பிணவறையில் பார்த்து வரை நாங்கள் அனைத்தையும் மாஜிஸ்திரேட்டிடம் கூறிவிட்டோம் என்றனர்.

Recommended Video

    ரத்தம் கொதிக்குது! அப்பா மகனுக்கு நீதி வேண்டும் #JusticeForJeyarajFenix
    எக்ஸ் ரே

    எக்ஸ் ரே

    அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் வைப்பதற்கு முன்னர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கோவில்பட்டி பொது மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் வெங்கடேஷின் மருத்துவ அறிக்கை கூறுகையில் பின் தொடை பகுதியில் அவர்களுக்கு காயமம் இருந்தது. அது போல் பென்னிக்ஸின் வலது முட்டியில் முறிவு இருந்தது எக்ஸ் ரே மூலம் தெரிந்தது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+