ஆவடியில் ஷாக்! வீட்டை பூட்டி விட்டு சாவியை மறைத்து வைத்த ஓனருக்கு அதிர்ச்சி! சிசிடிவியில் பகீர்
சென்னை: ஆவடியில் வீட்டை பூட்டிவிட்டு சாவியை ஒளித்து வைத்துவிட்டு சென்ற நபர் வீடு திரும்பியதும் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இது போன்று சம்பவங்கள் எத்தனை தவறு என்பதை தெரிந்திருந்தாலும் "என்ன ஆகிட போகுது" என்ற அலட்சியங்களால் நாம் இழப்பது நிறைய விஷயங்களை என்பதை பலர் மறந்துவிடுகிறார்கள்.
ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செந்தாமரை. அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியில் உள்ள உறவினரின் வீட்டுக்குச் செல்ல செயலி மூலம் ஆட்டோவை புக் செய்திருந்தார்.

அப்போது செந்தாமரையை அழைத்து செல்ல பெண் ஆட்டோ ஓட்டுநர் வந்திருந்தார். அவர் ஆட்டோவில் காத்திருந்த போது, செந்தாமரைக்கு போன் செய்து தான் வந்துவிட்டதாக கூறினார். உடனே செந்தாமரை வெளியே வந்து பார்த்துவிட்டு, இதோ தான் வந்துவிடுவதாக தெரிவித்துவிட்டு வீட்டுக்குள் சென்றார்.
பிறகு உள்ளே இருந்து வெளியே வந்த செந்தாமரை , வீட்டை பூட்டிவிட்டு சாவியை கதவு அருகே ஒளித்து வைத்துள்ளார். பிறகு செந்தாமரை தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு அங்கேயே தங்கிவிட்டார். மறுநாள் காலை வீட திரும்பிய போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு வீட்டிலிருந்த ஒரு சவரன் நகையும், ரூ 50 ஆயிரம் ரொக்கமும் திருடு போனது தெரியவந்தது.
இதையடுத்து ஆவடி காவல் துறையில் புகார் செய்ததை அடுத்து போலீஸார் அந்த வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது செந்தாமரையை அழைத்துச் சென்ற பெண் ஆட்டோ ஓட்டுநர், அவரை இறக்கிவிட்டுவிட்டு அதே வீட்டிற்கு திரும்பி வந்த காட்சிகள் பதிவாகியிருந்தன.
மேலும் அந்த ஆட்டோ ஓட்டுநர் , செந்தாமரை மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை ஆவடி போலீஸார் தேடி வருகிறார்கள்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications