அமித்ஷா சொல்கிறார்.. ஓ.பி.எஸ் தலையாட்டுகிறார்.. அதிமுக தொண்டர்கள்தான் பாவம்.. ஜோதிமணி
அடிமைகளின் கூடாரம் என்று அதிமுக-பாமகவை ஜோதிமணி விமர்சித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா இல்லாத அதிமுக, அடிமைகளின் கூடாரம் ஆகிவிட்டது என்று ஜோதிமணி விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணிக்கு, மறைந்த ஜெயலலிதா மீதான அரசியல் பார்வை என்பது வேறு, தனிப்பட்ட உணர்வுள்ள பார்வை என்பது வேறு. ஆணாதிக்க அரசியல் சூழலில், இறுதிவரை போராடி எழுந்து நின்ற ஒரு பெண் என்ற முறையில் அபரிமிதமான மரியாதை வைத்தவர் ஜோதிமணி.

இன்று ஜெயலலிதாவுக்கு பிறந்த நாள் என்பதால், தன் மரியாதையை ட்வீட் போட்டு செலுத்தி உள்ளார். அதே சமயத்தில் ஆளும் தரப்பையும், கூட்டணி வைத்த பாமகவையும் விமர்சித்துள்ளார்.
அந்த ட்வீட்டில், "இன்று ஜெ பிறந்ததினம். அவரில்லாத அதிமுக.அடிமைகளின் கூடாரமாகிவிட்டது. பாமக அதிமுக தலைமையகம் தாங்கள் வருவதற்கு தகுதியற்ற இடமென நினைக்கிறது. ஆசி பெற அதிமுக அவர்கள் இடம் செல்கிறது. அமித்ஷா இனி அதிமுக கிடையாது. நாங்கள் தான் என்கிறார். தலையாட்டுகிறார் ஓபிஎஸ். அதிமுக தொண்டர்கள் தான் பாவம்!" என்று பதிவிட்டுள்ளார்.
இன்று ஜெ பிறந்ததினம். அவரில்லாத அதிமுக.அடிமைகளின் கூடாரமாகிவிட்டது.பாமக அதிமுக தலைமையகம் தாங்கள் வருவதற்கு தகுதியற்ற இடமென நினைக்கிறது.ஆசி பெற அதிமுக அவர்கள் இடம் செல்கிறது. அமித்ஷா இனி அதிமுக கிடையாது.நாங்கள் தான் என்கிறார். தலையாட்டுகிறார் ஓபிஎஸ். அதிமுக தொண்டர்கள் தான் பாவம்!
— Jothimani (@jothims) February 24, 2019
ஒட்டுமொத்தமாக அதிமுகவை அடிமைகளின் கூடாரம் என்று ஜோதிமணி விமர்சித்து ட்வீட் போட்டாலும் இதற்கு பல கமெண்ட்கள் குவிகிறது. "ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறது" என்றும், சொந்த கட்சி அழிவதை பார்த்து கவலைப்படாமல் அடுத்த கட்சியை பார்த்து கவலைப்படும் ஒரே நபர் ஜோதிமணிதான்" என்றும் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications