ஜெயலலிதா கவலைக்கிடம் என்கிற தகவலை மறைத்த மாஜி ஆளுநர் வித்யாசகர் ராவ்!ஆறுமுகசாமி கமிஷன் பரபர புகார்!
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருந்தார் என்ற தகவலை அறிந்தும் ஜனாதிபதிக்கு அப்போது பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசகர் ராவ் தெரியப்படுத்தவில்லை என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.
ஆளுநராக இருந்த வித்யாசகர் ராவ் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளதாவது: ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாளே பிரதமர், ஆளுநர் சார்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து பூங்கொத்து அனுப்பப்பட்டன. அதற்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பினார்.

3 முறை அப்பல்லோ போன வித்யாசகர் ராவ்
ஜெயலலிதாவைப் பார்க்க வித்யாசகர் ராவ் அப்பல்லோ மருத்துவமனைக்கு 3 முறை வந்ததாக அவரது செயலாளர் ரமேஷ் சந்த் மீனா சாட்சியம் அளித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கை ஆளுநருக்கு அனுப்பப்படவில்லை. அதை செய்தி தாள்களில் பார்த்துதான் தெரிந்து கொண்டார் ஆளுநர். அப்பல்லோ பிரஸ் ரிலீசில் ஜெயலலிதா தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

கவலைக்கிடம் என மறுப்பு
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பிரதாப் சி ரெட்டியை ஆளுநர் சந்தித்தார். ஜெயலலிதாவை தாமும் ஆளுநரும் பார்த்த போது பல குழாய்களின் மத்தியில் அவர் காணப்பட்டார் என ரமேஷ்சந்த் மீனா தெரிவித்தார். ஜனாதிபதிக்கு 2016-ம் ஆண்டு அக்டோபர் 6-ந் தேதி ஆளுநர் எழுதிய கடிதத்தில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வார்டுக்கு சென்றதாகவும் அவர் மயக்கத்தில் இருந்தார் எனவும் தெரிவித்திருக்கிறார் ஆளுநர். அதில் ஜெயலலிதா கவலைக்கிடமாக இருந்தார் என ஆளுநர் தெரிவிக்கவில்லை.

2-வது முறையாக அப்பல்லோவில்..
ரமேஷ் சந்த் மீனாவின் சாட்சியங்களின் படி, ஜெயலலிதா கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக ஆளுநருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் ஆளுநர் அப்படி குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது. 2-வது முறையாக ஜெயலலிதாவை பார்க்க ஆளுநர், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற போது ஜெயலலிதா அவரைப் பார்க்கவில்லை; ஆனால் ஆளுநர் வித்யாசகர் ராவ் கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்திருக்கிறார். அப்போது ஜெயலலிதா பந்துவீச்சு பிசியோ தெரபி செய்து கொண்டிருந்தார் என பல சாட்சிகள் குறிப்பிட்டுள்ளன.

டிசம்பர் 4-ல் அப்பல்லோவில்
மேலும் ஜெயலலிதாவின் இதயம் செயலிழந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆளுநர் வருகை தந்தார். ஆனால் தரை தளத்திலேயே அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியை சந்தித்துவிட்டு சென்றார். ஆனால் ஜெயலலிதாவை பார்க்கவில்லை.. அப்படி தரை தளத்தில் இருந்து புறப்பட்டுவிட்டார். இவ்வாறு ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.
-
ஒரு கை பார்த்துற வேண்டிதான்.. பலத்தை காட்ட தயாராகும் சீனியர்கள்! சசிகலாவுடன் கைகோர்க்கும் ராமதாஸ்? -
அரசியல் முட்டு சந்தில் சின்னம்மா? திக்கு தெரியாமல் தவிக்கும் தைலாபுரம் அய்யா? 2026ல் போடும் கணக்கு! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications