இன்னும் 4 நாட்களில் தொடங்கும்.. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. ஸ்டாலின் இன்று முக்கிய முடிவு
சென்னை: தமிழ்நாட்டில் வழங்கப்பட உள்ள ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்க இன்னும் 4 நாட்களே உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுக்க மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய தொடங்கி உள்ளனர். இந்த திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதையடுத்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. முதற்கட்ட முகாம் ஜுலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெற்றது.

இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் ஆம் தேதி முதல் 14ஆம் தேதி 5 வரை நடைபெற்றது. இதுவரை ஒரு கோடியே 75 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசிச் செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உரிய நாளில் விண்ணப்பம் பதிவு செய்ய வருகை புரிய இயலாத நபர்களுக்குச் சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் விண்ணப்பப் பதிவு முன்னேற்றம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்கள்.
ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் முதல் மாத பணம் எப்போது வங்கி கணக்கில் வரும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
திட்டம் தொடங்கப்பட்டு அதிகபட்சம் 5 நாட்களில் அதாவது செப்டம்பர் 20ம் தேதி முதல் மாத தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும். நேரடியாக வங்கி கணக்கில் மக்களுக்கு பணம் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து செப்டம்பர் 5ம் தேதிக்குள் இதுவரை விண்ணப்பம் செய்த எல்லோருக்கும் விண்ணப்பங்களை இறுதி செய்து, 1 கோடி பயனர்களை தேர்வு செய்யும் முடிவை தமிழ்நாடு அரசு எடுத்து இருந்தது
இன்று ஆலோசனை: இந்த நிலையில்தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்ய உள்ளார். அண்ணா பிறந்தநாளான வரும் 15ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.
காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இன்று நடக்கும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பின்வரும் விஷயங்களை ஆலோசனை செய்ய இருக்கிறார்.
1. எத்தனை பயனாளிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள், அவர்கள் விவரம் என்ன?
2. தொடக்க விழா எப்படி நடத்தப்படும்?
3. நிராகரிக்கப்படும் பெண்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படுவது எப்படி ?
4. மாவட்ட அளவில் நடத்தப்படும் தொடக்க விழாக்கள் குறித்த ஆலோசனை.
5. ஏடிஎம் கார்டுகளை வழங்குவது, வரக்கூடிய மாதங்களில் எந்த தேதியில் பணம் டெபாசிட் செய்வது உள்ளிட்ட விஷயங்கள் பற்றி ஆலோசனை செய்யப்படும் என்கிறார்கள்.
எப்போது வரும்: அதன்படி செப்டம்பர் 5ம் தேதிக்கு இந்த திட்டத்திற்கு தேர்வானவர்கள் லிஸ்ட் எடுக்கப்பட்டு, அவர்களுக்கு மெசேஜ் மூலம் தகவல் அளிக்கப்பட்டுவிட்டது. மெசேஜ் மூலம் இவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. செப்டம்பர் 15ம் தேதியில் இருந்து ஒவ்வொருவராக பணம் பெற தொடங்குவார்கள். 1.70 கோடி பேர் விண்ணப்பம் செய்த நிலையில் 1.30 கோடி பேருக்கு பணம் அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கான பணம் இன்னும் 6 நாட்களில் கொடுக்கப்படும். இதற்காக விழா எடுத்து பணம் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டதாக ஏற்கனவே பயனாளிகளுக்கு மெசேஜ் சென்றுள்ளதுய். இந்த கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் பெறுவதற்காக நீங்கள் விண்ணப்பம் அளித்து அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கான மெசேஜும் வந்துள்ளது. இல்லையென்றால் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று மெசேஜ் வந்துள்ளது.
மெசேஜ்: முகாம்களில் விண்ணப்பங்களை கொடுத்தவர்களின் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு பணிகள் முடிந்து வருகின்றன. தேர்வானவர்கள் பெயர்கள் தற்போது லிஸ்டில் கணினி மூலம் பதிவேற்றப்பட்டு வருகின்றது.

இதில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் பட்சத்தில் அதை மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. அதாவது நீங்கள் விண்ணப்பம் கொடுக்கிறீர்கள், அது நிராகரிக்கப்படுகிறது என்றால் அதை மறுபரிசீலனை செய்ய மேல்முறையீடு செய்ய முடியும். உங்களிடம் ஆவணங்கள் எல்லாம் முறையாக இருந்து நீங்கள் தகுதியானவராக இருந்தால் நீங்கள் எளிதாக பரிசீலனை செய்ய முடியும்.
விழா: இதற்காக தமிழ்நாடு முழுக்க செப்டம்பர் 15ம் தேதி விழா எடுக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுக்க மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய தொடங்கி உள்ளனர். இந்த ஆய்விற்கு பின் முக்கியமான காரணங்கள் உள்ளன.
இந்த விழாவை மாவட்ட அளவில் சிறப்பாக நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். விழாவை சிறப்பாக, பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications