சட்டுன்னு டிரைவர் சீட்டில் உட்கார்ந்து.. ஸ்கூல் பஸ்சை ஓட்டிய கலெக்டர்.. வியந்து போன கள்ளக்குறிச்சி
சென்னை: கள்ளக்குறிச்சியில் பள்ளி பேருந்தை தானே, ஓட்டி ஆய்வு மேற்கொண்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்த நிலையில் வகுப்புகள் செயல்பட தொடங்கியுள்ளன.
இத்தனை நாட்களாக பள்ளிகளில் வாகனங்கள் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே அவை சரியான நிலையில் உள்ளனவா என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இருக்கைகள், ஜன்னல்கள்
இந்த நிலையில் தனியார் பேருந்துகளில் உள்ள இருக்கைகள், ஜன்னல்கள், அவசரகால வழி உள்ளிட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு வருகிறதா என்பது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பஸ்சை ஓட்டிய கலெக்டர்
பிறகு அவரே தனியார் பள்ளி பேருந்தை இயக்கி பார்த்தார். பேருந்து முறையான நிலையில் உள்ளதா என்பது குறித்து இயக்கி பார்த்தால்தான் தெரியும் என்பதால் அவரே இதைச் செய்துள்ளார்.

பாராட்டுக்கள்
மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் நடத்திய இந்த ஆய்வு மற்றும் அவரே பஸ்சை ஓட்டிப் பார்த்தது ஆகியவை, அங்கிருந்தோரால் பாராட்டப்பட்டது. இந்நிகழ்வில் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மோசம்
தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள சீயோன் பள்ளியை சேர்ந்த மாணவி சுருதி கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதம் 25ம் தேதி பள்ளி முடிந்து, பள்ளி பேருந்தில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது, பேருந்தில் தரைத்தளத்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தார். அப்போது அதே பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் மாணவி சுருதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்போது நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாதுகாப்பு
தமிழகத்தில் பள்ளிப் பேருந்துகள் நல்ல நிலையில் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். ஏனெனில், பஸ் உள்ளே ஓட்டை உடைசல் இருந்தாலோ, பிரேக் விஷயங்களை சரி செய்யவில்லை என்றாலோ, அது பெரும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே அவற்றை தவிர்க்க அதிகாரிகள் உரிய ஆய்வுகளை செய்ய வேண்டும் என்பது மக்கள் கோரிக்கையாக உள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications