செஞ்சியில் தடை- ஊழலுக்கு எதிராக மய்யத்துக்குக் கூடுவதைப் பார்த்து வயிறு எரிகிறதோ? கமல்ஹாசன் காட்டம்
சென்னை: செஞ்சி பொதுக்கூட்டத்தில் தமது தேர்தல் பிரசாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை கமல்ஹாசன் 2-வது கட்டமாக இன்று தொடங்கினார். சென்னை, காஞ்சிபுரத்தில் கமல்ஹாசனுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில் செஞ்சி பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

உண்ணவும் அருந்தவும் கொடுத்து ஊர்திகளில் அழைத்தாலும் வராத கூட்டம், ஊழலுக்கு எதிரான மனநிலையில் மய்யத்துக்குக் கூடுவதைப் பார்த்து வயிறு எரிகிறதோ? அதனால்தான் செஞ்சியில் பேச நமக்குத் தடைகள் வருகிறதோ? எது வரினும் நில்லோம், அஞ்சோம். #இனி_நாம்

நாப்பிளக்க வாய்ச்சழக்கு பேசுகின்ற தலைவர்காள் மக்கள் நீதி மலரும் போது எந்தப் பக்கம் ஓடுவீர்?! #இனி_நாம். இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications