நேற்று வந்த இந்த "சின்னப் பையனிடமிருந்து" இதை கட்சிகள் காப்பியடிக்கலாமே... தவறில்லையே!
Recommended Video

சென்னை: ஒரு கவுன்சிலராவது ஆகிவிட வேண்டும். ஆன வேகத்தில் "அள்ளி" விட வேண்டும் என்பதுதான் இப்போதெல்லாம் பெரும்பாலான அரசியல்வாதிகளின் மன தாகமாக இருக்கிறது. அதற்காக பணத்தை வாரி இறைக்க தயாராகவும் இருக்கின்றனர். போட்டதை விட டபுள் மடங்கு லாபம் கொடுக்கும் "தொழில்" அரசியல் என்றாகி விட்டது.
நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சீட்டு , இரு சீட்டுகளுக்காக தங்கள் கொள்கைகளை அடகு வைக்கும் கட்சிகளும் உள்ளன. ஒரு தலைவன் என்றால் நல்ல வழிகாட்டியாக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் பதவி, பணம் என அலைபவராக இருக்கக் கூடாது என்பதற்கு மிக சிறந்த உதாரணம் கமல்ஹாசன்தான்.
நம்ம கட்சி, நம்ம இஷ்டம், நம்ம தொகுதி என்று அவருக்கு அவரே எதையும் நிர்ணயித்துக் கொள்ளாமல் கூட்டு முடிவுகள், கூட்டு ஆலோசனைகள் என்று வித்தியாசமான அரசியலை சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறார் மக்களுக்கு. அதில் ஒன்றாகவே முதல் தேர்தலிலேயே தான் போட்டியிடுவதில்லை என்று அவர் எடுத்த முடிவு உள்ளது.

எந்த தொகுதி
மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் நேற்றைய தினம் 2-ஆவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானதால் பரபரப்பு இருந்தது. அதில் கமல் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

கமல்ஹாசன்
இந்த நிலையில் கோவையில் பொதுக் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் மீதமுள்ள 19 தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். கடைசியாக இதில் கமல்ஹாசன் பெயர் இருக்காது.

வாரிசு அரசியல்
பல்லக்கில் ஏறி உட்காருவதை விட அதை சுமப்பதே எனக்கு பெருமை என கூறி மற்றவர்களுக்கு வழி விட்டார். வாரிசு அரசியலை நியாயப்படுத்தி வரும் சில அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் பிறருக்கு வழிவிட்ட இவரது பாலிசி அனைவரையும் கவர்ந்துள்ளது.

அரசியல் கட்சி
சில பாரம்பரிய கட்சிகளை எடுத்துக் கொண்டோமேயானால் தந்தை,, மகன், பேரன் என குத்தகைக்கு எடுத்தது போல் தொடர்ந்து கொண்டே இருப்பர். ஒரு தேர்தலில் நின்றவர்களே அடுத்தடுத்து நிற்க வாய்ப்பு கொடுப்பது, தான் ஓரங்கட்டப்பட்டுவிட்டால் இருக்கும் போதே செல்வாக்கை பயன்படுத்தி மகனை வளர்த்து விடுவது இதுதான் அரசியல் கட்சிகள் இன்று செய்து கொண்டிருக்கின்றன.

பின்பற்றக் கூடாது
மற்ற கட்சிகளில் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களில் யாரும் அடிமட்ட தொண்டர்களே இல்லை. அதற்காக அவர்கள் உழைக்கவே இல்லை என்று நாம் சொல்ல முடியாது. ஏதோ இரு முறை எம்எல்ஏ, இரு முறை எம்பியாக இருந்தார்களா அதோடு போதும் என அடுத்தவர்களுக்கு வழிவிடுவதுதான் நல்ல பொறுப்பாளர்களுக்கு அழகு. நேற்று வந்த சின்னப்பையன் (கமல் பாணியில்) செய்கிறார், இதை ஏன் மற்ற கட்சிகள் பின்பற்றக் கூடாது?
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications