தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார்.. ஆனால் மகிழ முடியலையே.. கமல்ஹாசன் நறுக்!
சென்னை: தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டில் கூறியிருக்கையில், தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம்.
நாடு அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்திருக்கிறது. இந்தச் சரிவிலிருந்து மீளும் நோக்கத்தில் அமைச்சரவை மாற்றம் நடந்திருக்க வேண்டும்.

நன்மை
ஆனால், உள்கட்சித் தலைவர்கள், வேறு கட்சிகளிலிருந்து இணைந்தவர்கள், வரவிருக்கிற மாநில தேர்தல்கள் ஆகியவற்றை மனதில் வைத்து நடந்தியிருக்கும் இந்த விரிவாக்கம் பாஜகவிற்கு வேண்டுமானால் நன்மை பயக்கலாம். நாட்டிற்கு இதனால் ஆகப்போவதென்ன? என கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இரு ஆண்டுகளுக்கு பிறகு
மத்திய அமைச்சரவையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு பிறகு விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சர்களாக அன்புமணி ராமதாஸ், ஓபி ரவீந்திரநாத், ஜி கே வாசன் உள்ளிட்டோர் இடம் பெற வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.

மாநிலங்கள்
இந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் இடம் பெறாத மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க மோடி முயன்றார். அந்த வகையில் தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக மத்தியில் அமைச்சர்கள் இல்லாத நிலை இருந்தது.

அமைச்சரான எல் முருகன்
இதையடுத்து தமிழக பாஜக தலைவர் எல் முருகனை மத்திய அமைச்சராக்கியுள்ளார் மோடி. இதை விமர்சித்துதான் இந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கம் பாஜகவிற்கு வேண்டுமானால் நன்மை பயக்கலாம். இந்த பிரதிநிதித்துவத்தால் ஆக போவது ஒன்றும் இல்லை என கமல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications