என்னை ஆதரித்து ரஜினி பிரசாரம் செய்தால் சந்தோஷம்தான்.. கமல்ஹாசன்
ஆலந்தூர்: என்னை ஆதரித்து ரஜினி பிரசாரம் செய்தால் சந்தோஷம்தான் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் போது மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது.
மக்களின் அன்பு வெள்ளத்தில் நீந்தும் வாய்ப்பு கிடைக்கிறது. எங்களுடைய மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களுடன் தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். தேர்தல் பறக்கும் படையினர் பணம் பிடிபடும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

தேர்தல் ஆணையத்தில்
இதை பார்க்கும் எங்கள் வேட்பாளர்களும் நாமும் இப்படி செலவு செய்ய வேண்டும் என அடையாளம் காட்டுகிறார்கள். அவர்களுக்கு கனிவாக சொல்லுகிறேன். இதை செய்யக் கூடாது. அப்படி என் கட்சியினர் யாராவது செய்தால் அவர்களை தேர்தல் ஆணையத்தில் நானே காட்டி கொடுப்பேன்.

தேர்தல் ஆணையம்
நல்ல திட்டங்கள் எங்கு இருந்தாலும், யார் செய்திருந்தாலும் அதை மீண்டும் மேம்படுத்தி மக்களுக்கு தர மக்கள் நீதி மய்யம் முயற்சி செய்யும். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளில் தான் தேர்தல் ஆணையம், பறக்கும் படை, வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது என்று குற்றச்சாட்டு சொல்லப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல் படக்கூடாது.

பிரசாரம்
சேஷன் மாதிரி இருந்தவர்கள் இயக்கிய தேர்தல் ஆணையர், இன்னும் அழுத்தமாக செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் வேண்டுகோள். ரஜினி என்னிடத்தில் பேசும்போது எனக்கு ஆதரவு தருவதாக சொன்னார். எனக்கு ஆதரவு தரக்கோரி திருப்பி திருப்பி அவரிடம் வலியுறுத்த முடியாது. எனக்கு ஆதரவாக ரஜினி பிரசாரம் செய்வாரா என்று தெரியாது. பிரச்சாரம் செய்தால் சந்தோஷம்தான்.

ரத்து
வேலூரில் திமுக பிரமுகர் குடோனில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இந்த இடத்தில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். அழுக்கு அழுக்குதான் என்றார் கமல்ஹாசன்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications