திருடி கொண்டிருப்பதை நிறுத்தினாலே இரண்டு தமிழகத்தை நடத்தலாமே.. கமல் குட்டு
சென்னை: இப்போது திருடிக் கொண்டிருப்பதை நிறுத்தினாலே இரண்டு தமிழகத்தை நடத்தலாம் என கமல்ஹாசன் விமர்சனம் செய்தார்.
மக்கள் நீதி மய்யம் இந்திய குடியரசு கட்சி மற்றும் வளரும் தமிழகம் ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறது. இதில் இந்திய குடியரசு கட்சிக்கு 2 லோக்சபா தொகுதிகளும் 3 சட்டசபை தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதுபோல் வளரும் தமிழகத்துக்கு 2 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த வாரம் மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் வேட்பாளர்களை கமல் அறிவித்தார்.
தற்போது அனைத்து கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களும் சூடுபிடித்துள்ள நிலையில் தென்சென்னை லோக்சபா தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ரங்கராஜனை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில் செய்வோம், செய்வோம் என ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். வாய்ப்பு கொடுங்கள் செய்து காட்டுவோம் என்று நாங்கள் கூறுகிறோம்.
இப்போது திருடிக் கொண்டிருப்பதை நிறுத்தினாலே இரண்டு தமிழகத்தை நடத்தலாம் என கமல் மாநில அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.












Click it and Unblock the Notifications