ஸ்ரீபிரியாவிடம் நெருங்கி வந்த நபர்.. "கொடுங்க.. தருவீங்களா மாட்டீங்களா".. மிரண்டு போன மயிலாப்பூர்
ஸ்ரீபிரியா மயிலாப்பூரில் தீவிரமாக பிரச்சாரம் செய்தார்
சென்னை: ஸ்ரீபிரியா வாக்கு சேகரித்து வந்து கொண்டிருந்தபோது, டக்கென குறுக்கே வந்து நின்றார் அந்த நபர்.. இறுதியில் அவரை சமாளிப்பதற்குள் அங்கிருந்தோருக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.
மக்கள் நீதி மய்யம் சார்பில் நடிகை ஸ்ரீபிரியா மயிலாப்பூர் தொகுதியில் தீவிரமாக வாக்கு சேகரித்து கொண்டிருக்கிறார்.. இந்த தொகுதியில் கமல் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்ரீபிரியா களம் கண்டுள்ளார்.
அந்த தொகுதியில் எல்லா பகுதிகளிலும் சென்று டார்ச் லைட் சின்னத்துக்கான வாக்குகளை சேகரித்தும் வருகிறார்.

குடிகாரர்
அந்த வகையில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியிலும் வாக்கு சேகரித்தார்.. திறந்த ஆட்டோவில் நின்று கொண்டு வாக்கு கேட்டு வந்தார். அப்போது, குடிமகன் ஒருவர் அங்கே வந்தார்.. ஸ்ரீபிரியாவை பார்த்ததும் கையை குலுக்க கை நீட்டினார்.. ஆனால், ஸ்ரீபிரியாவோ, கொரோனா காரணம் காட்டி வேண்டாம் என்று சமாளித்தார்.

டென்ஷன்
உடனே அந்த குடிகாருக்கு கோபம் வந்துவிட்டது. "கையை கூட தர மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்? அப்பறம் எப்படி ஓட்டு போடறது?" என்று டென்ஷன் ஆனார்.. உடனே ஸ்ரீபிரியாவே, "அப்படி இல்லை, என்னால உங்களுக்கு கொரோனா வந்துட்டா எப்படி?" என்று கேட்டார். இதை கேட்டதும் குடிகாரர் பதறி விட்டார்.. "என்னது உங்களுக்கு கொரோனா இருக்கா? என்றார்.. உடனே ஸ்ரீபிரியா "ஆமாம்" என்று பொய் சொல்லி சமாளித்தார்.

போலீஸ்
அப்போதும் அந்த குடிகாரர் விடவில்லை.. சரி, பாவாயில்லை.. கை குடுங்க என்று நடுநடுவே வந்து கையை நீட்டினார்.. பிறகு ஸ்ரீபிரியா, "இங்க பாருங்க, உங்க நல்லதுக்குதான் சொல்றேன்.. நான் இப்போ உங்களுக்கு கை கொடுத்தேன்னு வெச்சுக்குங்க.. நம்ம ரெண்டு பேரையும் புடிச்சு ஜெயில்ல போட்டுடுவாங்க" என்றார். அதற்கு பிறகு அந்த குடிகாரர், "என்னது ஜெயிலா.. ஸாரி மேடம்" என்று சொல்லி அப்போதுதான் விலகி சென்றார்..

பரபரப்பு
இப்படித்தான் கடந்த வாரம் ஸ்ரீபிரியாவிடம், இதேபோன்ற குடிகாரர் ஒருவர் பணம் கேட்டு தொல்லை செய்தார்.. ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி வந்த அந்த நோயாளி குடிகாரர், சொந்த ஊர் சென்று கொண்டிருந்தபோது, வழியில்ஸ்ரீபிரியாவை பார்த்ததும் டக்கெனநின்றுவிட்டார்.. பணம் கேட்டு தொந்தரவு செய்து, கடைசியில் பாதுகாப்பு போலீசார் தலையிட்டு, அந்த நபரை அங்கிருந்து அனுப்பி வைத்த சம்பவம் நடந்தது.. இப்போது, அதுபோலவே, இன்னொரு சம்பவம் நடந்துள்ளது வியப்பை தந்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications