ஆதிக்க வெறியின் கோரத்தாண்டவம் தான் அம்பேத்கர் சிலை உடைப்பு.. கமல் கண்டனம்
Recommended Video
உடைக்கப்பட்ட இடத்தில் புதிய அம்பேத்கர் சிலையை நிறுவிய தமிழக அரசு- வீடியோ
சென்னை: வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை தகர்க்கப்பட்ட செயலுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணல் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது ஆதிக்க வெறியின் கோரத்தாண்டவம் என சாடியுள்ளார். மேலும், இரு சமூகங்கள் மோதிக்கொள்வது அரசியலைத் தொழிலாய் செய்பவர்களுக்கு தீனியே தவிர, தமிழின முன்னேற்றத்திற்கு வழியல்ல எனவும் கமல் கூறியுள்ளார்.
சமூக விரோதிகள் மீது அரசின் நடவடிக்கைகள் கடுமையாக இருக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதோடு, நல்லவர்கள் சமூக அமைதி ஏற்பட முயற்சிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் கமல்.
English summary
MNM leader Kamal Hassan has condemned Ambedhkar Statue demolition in Vedaranyam.
Story first published: Monday, August 26, 2019, 17:40 [IST]