கீதா ஜீவன் பேசிய தேவையில்லாத பேச்சு.. கனிமொழிக்கு எதிராக திரும்புமா.. கவலையில் திமுக!
கீதா ஜீவன் ஆடியோ விவகாரமானது கனிமொழிக்கு எதிராக திரும்புவதாக சொல்லப்படுகிறது.
Recommended Video

சென்னை: தூத்துக்குடி தொகுதியை பொறுத்தவரை, 15 நாளைக்கு முன்பு இருந்த நிலைமை வேறு, இன்றைக்கு இருக்கக்கூடிய நிலைமை வேறு!
3 வருடங்களுக்கு முன்பே தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவது என கனிமொழி திட்டமிட்டார். அதன்படியே காய்களையும் நகர்த்தினார். ஒரு கிராமத்தையும் தத்தெடுத்து, அதன் வளர்ச்சிக்கு பாடுபட்டார். நாடார் இன மக்களை சந்தித்து பேசி வந்தார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களோடு கரம் கோர்த்தார்.
கிராம சபை கூட்டத்தின்போதும், மக்களின் மன வெகுவாக கவர்ந்தார். கிட்டத்தட்ட தூத்துக்குடி தொகுதியே திமுக வசம் வந்துவிட்டது போன்ற ஒரு பிம்பம் ஏற்படவும் ஆரம்பித்தது. ஆனால் எல்லாமே ஒரே ஒரு ஆடியோவால் நொறுங்கி போனது. எம்எல்ஏ கீதாஜீவன் பேசிய ஆடியோதான் அதற்கு காரணம்!

ஐடியா தருகிறார்
மதுரையை சேர்ந்த சைவ வேளாளர் சங்க நிர்வாகி ஒருவர் கீதாஜீவனிடம் பேசும்போது, அவருக்கு ஆதரவாகவும் பட்டியல் இனத்தினருக்கு எதிராகவும் கீதாஜீவன் கருத்து தெரிவித்திருந்தார். அதாவது வேளாளர் என்ற பட்டம் பிற சாதியினருக்குக் கிடைத்துவிடாமல் இருக்க வேண்டுமானால், மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டம், நகரம், கிராமங்களில் உள்ள ஏராளமான அமைப்புகளின் பெயரில் மனுக்களை எழுதி ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களுக்கு அனுப்புமாறு கீதாஜீவன் ஐடியா கொடுக்கிறார். மேலும் இதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவருக்கும் பல்வேறு அமைப்புகளின் பெயரில் மனு கொடுக்குமாறும் கீதா ஜீவன் அறிவுரை வழங்குகிறார்.

தலித் அமைப்புகள்
இப்படி ஒருதலைபட்சமாக கீதா ஜீவன் பேசிய பேச்சுக்குதான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பி அது இன்றைய தேதிவரை குறையாமல் உள்ளதாம். தேர்தல் பிரச்சாரத்தின்போது, பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்களுக்குள் கீதாஜீவனை நுழைய விடமாட்டோம் என சில அமைப்புகளை சேர்ந்தவர்களும் அறிவித்திருந்தார்கள்.

அதிருப்தி
அன்று கீதா ஜீவன் பேசியது அத்தனையும் இன்றைக்கு கனிமொழிக்கு எதிராக திரும்பி இருக்கிறதாம். ஏற்கனவே வரும் தேர்தலில் தலித் தொகுதிகளில் திமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவு என்ற கருத்து எழுந்துள்ள நிலையில், தூத்துக்குடி திமுகவின் தேவேந்திர குல வேளாளர் தொண்டர்களிடம் இது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

பலவீனம்
கனிமொழிக்கு எதிரான நிலைப்பாடு என்றால், அது கண்டிப்பாக தமிழிசை சவுந்தராஜனுக்கோ அல்லது டிடிவி தினகரனுக்கோ தான் சாதகமாக அமையும் சூழல் உள்ளது. இதில் டிடிவி தினகரன் பிரிக்கக்கூடிய ஓட்டுக்கள் யாருக்கு பலமாகவும், பலவீனமாகவும் இருக்க போகிறது என்பதை வைத்தும் இந்த தேர்தல் முடிவுகள் இருக்கும்.

வியூகம்
சுருக்கமாக சொல்லபோனால், தேர்தல் பிரச்சாரமும், அதற்கான வியூகமும் முக்கியமான பங்கை வகித்தாலும், மீனவர் சமூகமும், தேவேந்திர குல வேளாளர் சமுதாயமும் யாருக்கு ஓட்டு போடுகிறார்களோ அவர்தான் வெற்றியாளர் என்பதுதான் இன்றைய தூத்துக்குடி தொகுதி கள நிலவரம்!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications