2020 ஏப்ரலில் கட்சித் தொடங்குகிறார் ரஜினி.. கராத்தே தியாகராஜன் தகவல்.. இது அவருக்கு தெரியுமா!
Recommended Video

சென்னை: 2020-ஆம் ஆண்டு ஏப்ரலில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குகிறார் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் கடந்த 2017-ஆம் ஆண்டு மே மாதம் தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என தெரிவித்தார். இதன் மூலம் தான் அரசியலுக்கு வர தயார் என ரசிகர்களுக்கு சிக்னல் கொடுத்தார்.
இதையடுத்து அவர் அதே ஆண்டு டிசம்பர் 2017-ஆம் ஆண்டு 31-ஆம் தேதி மீண்டும் ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது நான் அரசியலுக்கு வருகிறேன். புதிதாக கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் நாம் போட்டியிடுவோம். அதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டன. இன்னும் அம்பு எய்துவது மட்டும்தான் பாக்கி கண்ணா என்றார்.

சேர்க்கை
இது ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக அமைந்தது. இவ்வாறு அறிவித்த அடுத்த நாளே ரஜினி ரசிகர் மன்றம் என்பதை தொடங்கினார். இதற்கு ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையையும் தொடங்கி வைத்தார்.

ரசிகர்கள் கலக்கம்
ரஜினிகாந்த் இத்தனை வேகமாக செயல்பட்டதால் விரைவில் அவர் கட்சியை தொடங்கிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக எந்த வித முன்னேற்றமும் இல்லை. எந்த தேர்தலிலும் ரஜினி போட்டியிடவில்லை. இதனால் ரசிகர்கள் கலக்கமடைந்தனர்.

சட்டசபை தேர்தல்
இந்த நிலையில் தமிழக இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு ரஜினி கூறுகையில் எங்கள் இலக்கு 234 தொகுதிகள் என்றார். இதனால் ரஜினி 2021-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என கூறப்பட்டது.

அரசியல் நோக்காளர்கள்
2021-ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட அந்த கட்சியானது தொடங்கி ஓராண்டு ஆக வேண்டும். எனவே அடுத்த ஆண்டு 2020-இல் மார்ச், ஏப்ரலில் கட்சி தொடங்கினால் அடுத்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் ரஜினி கட்சி போட்டியிடலாம் என அரசியல் நோக்காளர்கள் தெரிவித்தனர்.

ரஜினி
இந்த நிலையில் ரஜினியின் நண்பரும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியுமான கராத்தே தியாகராஜன் கூறுகையில் அடுத்த வருடம் ஏப்ரலில் ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் போது நிச்சயமாக மிகப்பெரிய சக்தியாக உருவெடுப்பார். தமிழகத்தில் கருணாநிதி ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார் என்று தெரிவித்தார். எதுவாகினும் ரஜினியாகவே வாயை திறந்து தான் கட்சி தொடங்கும் தேதியை அறிவிக்கும் வரை அனைத்தையும் கடந்து செல்வோம்.
-
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சாதி பெயர் இருந்தது தட்டச்சு பிழை - சிங்காநல்லூர் ஸ்ரீநிதி விளக்கம்! -
“நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன்..” திருமாவளவன் அறிவித்த வேட்பாளர் பேச்சால் குழப்பம்! -
மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு.. முன்னாள் எம்பி விஸ்வநாதனுக்கு வாய்ப்பு! -
மேலூரில் மீண்டும் இறங்கும் மாணிக்கம் தாகூர் மாமனார்? சீட்டை பெற போராடும் கதர்கள்.. என்ன நடக்கிறது? -
Melur Candidate: மேலூர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன்? இவர்தான் காரணமா? 2 நாள்தானே இருக்கு! -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்!












Click it and Unblock the Notifications