கர்நாடகாவில் போட்டியிடாமல் முதல்வர்? 'இதிலுமா'.. அண்ணாமலையை வம்பிழுத்த காயத்ரி ரகுராம்
சென்னை: காங்கிரஸ் மேலிடத்தின் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வராக டிகே சிவகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை வைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நடிகை காயத்ரி ரகுராம் கிண்டல் செய்து ட்விட் போடடுள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக பொறுப்பாளர்களில் ஒருவராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டிருந்தார். அண்ணாமலை தீவிரமாக பிரச்சாரம் செய்தார். பல்வேறு தொகுதிகளுக்கு வியூகமும் வகுத்தார். எனினும் பாஜக கர்நாடாகவில் தோல்வியை தழுவியது. கணிசமான தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றாலும், கர்நாடகாவில் யார் முதல்வர் என்பதில் டிகே சிவகுமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக சித்தராமையா முதல்வராகவும், டிகே சிவகுமார் துணை முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தை வைத்து நடிகை காயத்ரி ரகுராம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "முழு சிரமத்துடன் அண்ணாமலை காங்கிரஸுக்குப் பிரச்சாரம் செய்தார். பாரதிய ஜனதா கட்சி அவர்களின் சொந்த மேனேஜர் அண்ணாமலையை அனுப்பி வைத்ததால், அண்ணாமலை போட்டியிடாமல் முதல்வர் ஆகிவிடுவார் என்று முழு நம்பிக்கையில் இருந்தது டெய்பர்ரூம். இப்போது முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரும் கர்நாடகா தேர்வு செய்யப்பட்டு வருகிறது வாழ்த்துகள். ஆனால் இது அண்ணாமலைக்கு ஏமாற்றம்." என்று கிண்டல் செய்துள்ளார்.
பாஜகவில் இருந்து விலகிய பின்னர் காயத்ரி ரகுராம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications