முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம்.. வங்க கடல் போல அலங்கரிக்கப்பட்ட நினைவிடம்
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் வங்கக்கடல் போன்று அலங்கரிப்பு செய்யப்பட்டு உள்ளது.
Recommended Video
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இது அவரின் 4வது நினைவு தினம் ஆகும்.

காவிரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி 2018 ஆகஸ்ட் 7ம் தேதி அன்று காலமானார். இன்று அவரின் நினைவு தினத்தை முன்னிட்டு, திருவாரூரில் கருணாநிதி இல்லம் மலர்களால் இதய வடிவில் அலங்கரிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுக்க இருக்கும் கருணாநிதியின் சிலைகள் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஊர்களில் இருக்கும் திமுக கட்சி கொடிகள் முன் கருணாநிதி புகைப்படம் வைக்கப்பட்டு மலர் தூவப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல் அவரின் நினைவிடத்தில் வங்கக்கடல் போன்று அலங்கரிப்பு செய்யப்பட்டு உள்ளது. நீல நிறத்தில் கடல் அலைகள் இருப்பது போன்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வங்கக்கடல் தாலாட்டும் சங்கத்தமிழை போற்றுவோம் என்ற வாசகம் இதில் இடம்பெற்று உள்ளது.
பொதுவாக தமிழ்நாட்டில் ஏதாவது விழா நடந்தால், அல்லது திமுக தொடர்பான நிகழ்வுகள் வந்தால் இவரின் சமாதி அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். செஸ் ஒலிம்பியாட்டை முன்னிட்டு சமீபத்தில் இவரின் சமாதி செஸ் போர்ட் போல அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது அவரின் நினைவிடத்தில் வங்கக்கடல் போன்று அலங்கரிப்பு செய்யப்பட்டு உள்ளது.
கருணாநிதியின் பேனாவை மெரினா வங்கக்கடலில் சிலையாக அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மெரினாவில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்திற்கு மிக அருகில் இந்த நினைவுச்சின்னம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கூவம் ஆறு கடலில் கடக்கும் இடத்திற்கு அருகில் பேனா நினைவுச்சின்னம் அமையவுள்ளது. இங்கே அதிக மணல் உள்ளதாலும், தரை வலுவாக இருப்பதாலும், எளிதாக கட்டுமானம் மேற்கொள்ள முடியும். கரையில் இருந்து 360 மீட்டர் தூரத்தில் இந்த சிலை வைக்கப்பட உள்ளது. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் தூரத்தில் இது கட்டப்பட உள்ளது.
இந்த நிலையில்தான் தற்போது அவரின் நினைவிடத்தில் வங்கக்கடல் போன்று அலங்கரிப்பு செய்யப்பட்டு உள்ளது.
-
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications