சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடம் பிப்ரவரி 26ஆம் தேதி திறப்பு.. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை: சென்னை மெரினாவில் புனரமைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் வரும் 26ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல்நல பாதிப்பால் காலமானார். இதையடுத்து அவரது உடலை நல்லடக்கம் செய்ய அப்போதைய அதிமுக அரசிடம் மெரினாவில் இடம் கேட்கப்பட்டது.

அதற்கு அதிமுக மறுத்துவிட்ட நிலையில் திமுக ஹைகோர்ட்டை நாடியது. இதையடுத்து கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய ஹைகோர்ட் உத்தரவிட்டதை அடுத்து பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடல் ராஜாஜி ஹாலில் இருந்து சென்னை மெரினாவுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து அங்கு முழு அரசு மரியாதையுடன் அவருடைய முன்னாள் முதல்வர் அண்ணா சமாதிக்கு அருகே இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து 2021 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தது.

அப்போது கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட மெரினாவில் அவருக்கு நினைவிடம் கட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டவிதி எண் 110இன் கீழ் அறிவித்திருந்தார். அதன்படி தமிழக அரசு சார்பில் 2,21 ஏக்கர் பரப்பளவில் ரூ 39 கோடியில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டது.
இது புதிய நினைவிடம் அல்ல, ஏற்கெனவே இருந்த நினைவிடம் புனரமைக்கப்பட்டு வரும் திங்கள்கிழமை திறக்கப்படுகிறது. கருணாநிதி நினைவிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.












Click it and Unblock the Notifications