Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருப்பர் கூட்டம் சுரேந்திரன், நபிகள் நாயகத்தை அவமரியாதை செய்த கோபல் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கந்தர் சஷ்டி கவசம் பற்றி அவதூறாக பேசிய சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. நபிகள் நாயகம் குறித்து ஆபாசமாக பேசிய கோபால் என்பவர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கந்த சஷ்டி கவசம் பாடல் பற்றி அவதூறாக கருத்து வெளியிட்ட கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாகவும் நபிகள் நாயகம் குறித்து ஆபாசமாக பேசிய கோபால் என்பவர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Karuppar Koottam சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது | Oneindia Tamil

    கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தன. கடவுள்கள் பற்றியும் மோசமான விமர்சனங்கள் அந்த சேனலில் வெளியிடப்பட்டிருந்தன.

    karuppar kootam surendhran arrested under Goondas Act

    அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பாஜக சார்பில் சென்னை போலீஸ் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை கைது செய்தனர். கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலில் வெளியிடப்பட்டிருந்த அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டன.

    காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் கடந்த 16 ஆம் தேதி புதுச்சேரி அரியங்குப்பம் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். அதன் பின்னர் அவர் சென்னை போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சுரேந்திரன் மற்றும் செந்தில்வாசனை ஜூலை 30ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

    இந்த நிலையில் சுரேந்திரன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை மாநகர காவல் ஆய்வாளர் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சுரேந்திரன் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதே போல இந்து தமிழர் பேரவை என்ற அமைப்பை சேர்ந்த கோபால் என்பவர் நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்துகளை பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய இயக்கத்தினர், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் மற்றும் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய போலீசார் கோபால் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். கோபால் மீதும் தற்போது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+