கரூர் கூட்ட நெரிசலில் சதி.. பரபரப்பை கிளப்பிய தாடி பாலாஜி! விஜய் மன உளைச்சலில் இருக்கிறாராம்!
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து, ஆனால் அதன் பின்னணியில் ஒரு திட்டமிட்ட சதி இருக்கலாம் எனவும், மேலும், அங்கு காவல்துறையின் பாதுகாப்பும் போதுமானதாக இல்லை
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினரும், நடிகருமான தாடி பாலாஜி நெல்லையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நடிகர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த சம்பவத்தில் சதி இருப்பதாக தமிழக வெற்றி கழகத்தினர் கூறி வருகின்றனர். மேலும் தாங்கள் கேட்ட இடத்தை விட குறுகலான இடம் ஒதுக்கப்பட்டதாகவும் அதன் காரணமாகவே நெரிசல் ஏற்பட்டு மரணங்கள் ஏற்பட்டதாக புகார் கூறுகின்றனர்.

விஜய் கூட்ட நெரிசல்
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை வீடியோ கால் மூலம் சந்தித்த விஜய், விரைவில் அவர்களை நேரில் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது, இதற்கிடையே கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் இந்த சம்பவத்திற்கு பின் சதி இருக்கலாம் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் நடிகர் தாடி பாலாஜி. நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "கரூர் சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தலைவர் விஜய்க்கு மிகுந்தா மன வருத்தத்தை அளித்துள்ளது. அவர் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறார்.
தாடி பாலாஜி
நான் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். இது தலைவருக்கு தெரியாமல் நடந்த ஒரு நிகழ்வு, இதில் அவர் என்ன செய்ய முடியும்?' என்று அவர்களே கூறினார்கள். தலைவர் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் காணொளி காட்சி மூலம் பேசி ஆறுதல் கூறியுள்ளார். அவருக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. விரைவில் அவர் அவர்களை நேரில் சந்திப்பார். கரூர் போன்ற ஒரு குறுகலான இடத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது தலைவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கூட்ட நெரிசல் சதி
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் இடத்தின் தன்மை மற்றும் மக்கள் கூட்டம் குறித்து தலைவரிடம் தெரிவித்திருக்க வேண்டும். இது ஒரு விபத்தாக இருந்தாலும், இதன் பின்னணியில் தலைவர் மீது பழி சுமத்தும் நோக்கில் ஏதேனும் சதி நடந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. மேலும், அங்கு காவல்துறையின் பாதுகாப்பும் போதுமானதாக இல்லை. தலைவர் விஜய் இந்த சம்பவம் குறித்து பேசினால், அது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும்.
த.வெ.க. தலைவர் விஜய்
விரைவில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து, கரூர் சம்பவம் தொடர்பான பல மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன். தலைமைக்கும், தலைவருக்கும் உண்மையாகவும், விசுவாசமாகவும் இருப்பவர்களே பதவிகளுக்கு வர வேண்டும். பதவியை பெற்றுக் கொண்டு செயல்படாமல் இருக்கக் கூடாது, உண்மையாக உழைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
-
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம்












Click it and Unblock the Notifications