கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆஜர்! இறுகும் பிடி
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக டெல்லி அலுவலகத்தில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் விசாரணைக்கு ஆஜர் ஆகி உள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்காக தவெக நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாக தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு பயணத்தை நடத்தி வருகிறார். அந்த வகையில், கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய், கரூரில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரித்து வருகிறது. கரூரில் முகாமிட்டு கடந்த சில வாரங்களாக சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
சம்பவ பகுதியில் கடை வைத்து இருந்தவர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் உள்ளிட்டோருடன் விசாரணை நடைபெற்றது. தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கரூர் மேற்கு மாவட்ட தவெக பொதுச்செயலாளர் மதியழகன் ஆகியோரிடமும் சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தவெக நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதேபோல, கரூர் மாவட்ட ஆட்சியர், கரூர் மாவட்ட எஸ்பி ஜோஷ் தங்கையா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன், கரூர் நகர எஸ்பி மணிவண்ணன் ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர் ஆகினர்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக உயர் மட்ட நிர்வாகிகள், கரூர் கலெக்டர், எஸ்பி உள்ளிட்டோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை காட்டுவதாக அமைந்துள்ளது.
-
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
ரஜினி பற்றி பேசிய சர்ச்சை அடங்குவதற்குள் புதிய பஞ்சாயத்தை இழுத்த ஆதவ்! மாணிக்கம் தாகூர் கடும் கோபம் -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?











Click it and Unblock the Notifications