கொப்பளிக்கும் காசிமேடு கடல்.. ஆளை வெத்தலை போல் மடிச்சி இழுத்து செல்லும் அளவுக்கு வேகம்.. வீடியோ
சென்னை: சென்னை காசிமேட்டில் கடல் அலைகள் மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டன. ஆள் உயரத்திற்கு கடல் அலைகள் வீசியதால் வீடியோவே பார்ப்பதற்கு பதறும் நிலையில் உள்ளது.
Recommended Video
நிகர் புயல் தமிழகத்தில் அதி தீவிர புயலாக மாறி வருகிறது. இந்த புயல் நாளை மலை கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த புயலால் நேற்று முதல் கடற்கரைகள் சீற்றத்துடன் காணப்பட்டன.
கடற்கரை பகுதிகளில் வசித்து வந்த மீனவ மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும் அவர்களது படகுகளை நிறுத்த இடம் இல்லாததால் புயலால் சேதமுற்றுவிடுமோ என்ற அச்சம் அவர்களிடம் இருந்து வருகிறது.
7 மாவட்டங்களில் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்குமா?.. இந்தியன் ஆயில் நிறுவனம் கூறுவது என்ன?
மாமல்லபுரம் உள்ளிட்ட கடற்கரைகளில் கடல் அலைகள் 10 அடி வரை உயர்ந்தன. இந்த நிலையில் காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் கடல் அலைகள் அங்கு வைக்கப்பட்டுள்ள பாறாங்கற்களை தாண்டி அடித்து வருகிறது.
A scene at kasimedu today.!! It's looking dangerous. #Chennai #chennairains #NivarCyclone #Nivar #CycloneNivar #நிவர்புயல் #நிவர் pic.twitter.com/sknw0voEsE
— Shivanand (@ShivTweetss) November 24, 2020
ஆளையே சுருட்டி உள்ளே இழுத்து செல்லும் அளவுக்கு மிகவும் ஆக்ரோஷமாக வேகமாக கடல் அலைகள் எழுந்தன. அரசு அறிவுறுத்தியும் இந்த காட்சிகளை பொதுமக்கள் கண்டனர். தங்கள் செல்போன்களில் வீடியோவாகவும் எடுத்தனர். மிகவும் ஆபத்தாக உள்ளது.