சத்யராஜ் கொடுத்த அல்வா.. ‘அனுபவம்’ எப்படி இருந்துச்சு? கஸ்தூரி தக் லைஃப் பதில்
சென்னை: நடிகர் சத்யராஜ் உடன் அமைதிப்படை படத்தில் அல்வா சீனில் நடித்தது குறித்து தன்னிடமே எப்போதும் கேள்வி எழுப்பப்படுவதாகவும், அந்த சீனில் அனுபவம் எப்படி இருந்து என்னிடமே கேட்கிறார்கள் எனக் கூறியிருக்கிறார் நடிகை கஸ்தூரி. அது மட்டுமல்லாமல் நியாயப்படி சத்யராஜ் இடம் தான் அந்த கேள்வியைக் கேட்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக நடிகையாக பயணித்து வருபவர் கஸ்தூரி. குறிப்பாக 1990 காலகட்டங்களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். சத்யராஜ், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கியவர்.
குறிப்பாக சத்யராஜ் உடன் அவர் நடித்த அமைதிப்படை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதில் இடம் பெற்ற அல்வா சீனை யாராலும் மறக்க முடியாது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருந்த ஒதுங்கி அவர் சீரியல்களில் நடித்து வந்தார்.

அதற்குப் பிறகு தமிழ் படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடியவர், தற்போது வரை அவ்வப்போது சில திரைப்படங்களில் தலைகாட்டி வருகிறார். தற்போது சினிமா மற்றும் அரசியல் என இரு குதிரைகளின் பயணித்து வரும் அவர், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருப்பவர். மேலும், சினிமா சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார். அப்படித்தான் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற வானரன் திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர்," சினிமா என்றாலே பலருக்கும் தவறான பார்வை இருக்கிறது. வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு தான் அப்படி. உண்மையில் சினிமா மிக மிக பாதுகாப்பாக இருக்கிறது. இது நான் தைரியமாகவும் திமிராகவும் சொல்வேன். படப்பிடிப்பு நடக்கும் போது எங்களை சுற்றி இருக்கும் ஆண்கள் எங்களிடம் மிகவும் அன்போடு நடந்து கொள்வார்கள். தயவு செய்து யாரும் பெண்கள் குறித்தும் சினிமா துறையில் இருக்கும் ஆண்கள் குறித்தும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்" என்றார்.
மேலும்,"நான் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அமைதிப்படை படத்தில் அல்வா வாங்கி அனுபவம் எப்படி இருந்தது என என்னிடம் கேட்கிறார்கள். உண்மையில் அல்வா கொடுத்த சத்யராஜை யாருமே கேட்பதில்லை. இதுகுறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்" எனக் கூறியிருக்கிறார்.
மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ், கஸ்தூரி, ரஞ்சிதா ஆகியோர் நடித்திருந்த அமைதிப்படை திரைப்படம் தமிழக சினிமா வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படம். அரசியல் நையாண்டி ஜானரில் வெளிவந்த இந்த திரைப்படம் தற்போது வரை பலரின் ஃபேவரைட். அந்த படத்தில் கஸ்தூரியை காதலித்து ஏமாற்றும் சத்யராஜ் அல்வாவில் போதைப் பொருளை கொடுத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்வது போல காட்சி நடந்திருக்கும்.
அந்த காட்சியை மட்டும் நான்கு மணி நேரம் படமாக்கியதாக கஸ்தூரி கூறியிருக்கிறார். மேலும் அந்த படப்பிடிப்பின் போது சத்யராஜ் தன்னிடம் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டதாக பலமுறை அவர் சொல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சத்யராஜ் ஹீரோயின்களை அப்பா கட்டிப்பிடிப்பது போல சீன் வைக்க வேண்டும் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்த நிலையில், சத்யராஜ் மிகவும் ஜென்டில்மேன். அமைதிப்படை படத்தின் போது என்னிடம் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார்" என கஸ்தூரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications