மீனாட்சி அம்மனை கும்பிட்டதுபோல் ஸ்டாலினையும் கும்பிட செல்கிறார் கேசிஆர்.. சொல்கிறார் கேஎஸ் அழகிரி!
Recommended Video
சென்னை: மதுரையில் மீனாட்சி அம்மனை கும்பிட்டதுபோல் சந்திரசேகர் ராவ் ஸ்டாலினையும் கும்பிட செல்கிறார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சந்திர சேகர் ராவ் ஸ்டாலினை சந்திப்பதால் மூன்றாவது அணி உருவாகுமா என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி, மூன்றாவது அமைக்கப்போவதாக சந்திர சேகர் ராவ் உங்களிடம் கூறினாரா என பதிலுக்கு கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து பேசிய அவர், மதுரையில் மீனாட்சி அம்மனை கும்பிட்டதுபோல் சந்திரசேகர் ராவ் ஸ்டாலினையும் கும்பிட செல்கிறார் என்றார்.
மேலும் நட்பின் அடிப்படையிலேயே ஸ்டாலினை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்கிறார். 3வது அணி அமைய வாய்ப்பு இல்லை.
இஸ்லாம் மதத்தில் ஐஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் இருப்பது போல் இந்து மதத்தில் ஆர் எஸ் எஸ் இயக்கம் உள்ளது. கமல் கூறியதை 100 சதவீதம் மட்டுமல்ல 1000% ஆதரிக்கிறேன் ஒப்புக்கொள்கிறேன். இவ்வாறு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications