திருவனந்தபுரம்: கேரளா முதல்வராக பினராயி விஜயன் 2-வது முறையாக இன்று பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் ஆரிப் முகமது கான் பினராயி விஜயனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நடந்து முடிந்த கேரளா சட்டசபை தேர்தலில் 140 சட்டசபை தொகுதிகளில் எல்டிஎப் (இடதுசாரிகள்) கூட்டணி 99 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. 41 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் கூட்டணி வென்றது. இதையடுத்து இன்று மாலை 3.30 மணிக்கு கேரளா முதல்வராக பினராயி விஜயன் மீண்டும் பதவியேற்றுள்ளார்.
அவருடன் 3 பெண் அமைச்சர்கள் உட்பட 21 அமைச்சர்களும் இன்று பதவியேற்கின்றனர். இந்த பதவியேற்பு விழாவுக்கு 500 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர். முதல்வரை தொடர்ந்து அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
4:38 PM, 20 May
திருவனந்தபுரம்: சிபிஐ கட்சியில் இருந்து 4 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்
4:30 PM, 20 May
திருவனந்தபுரம்: கேரளா காங்கிரஸ் (மணி), ஜனதா தளம் (மதசார்பற்ற), தேசியவாத காங்கிரஸ் சார்பாக தலா ஒரு அமைச்சர்கள் பதவி ஏற்றனர்
4:27 PM, 20 May
திருவனந்தபுரம்: சிபிஐ கட்சியில் இருந்து 4 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்
4:26 PM, 20 May
திருவனந்தபுரம்: 12 அமைச்சர்கள் சிபிஎம் கட்சியில் இருந்து பதவி ஏற்றனர்
4:11 PM, 20 May
திருவனந்தபுரம்: பினராயி விஜயனின் புதிய அமைச்சரவையில் பி.ஏ.முஹம்மது ரியாஸ், வி.சிவான்குட்டி, வீணா ஜார்ஜ், கே.என்.பாலாகோபால், வி.என்.வாசவன், சாஜி செரியன், பி ராஜீவ், எம்.பி.ராஜேஷ், கே ராதாகிருஷ்ணன், பி நந்தகுமார், மற்றும் எம்.வி.கோவிந்தன் போன்ற இளம் சிபிஎம் தலைவர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்
4:06 PM, 20 May
திருவனந்தபுரம்: எல்டிஎப் எல்எல்ஏக்கள் ஆண்டனி ராஜு, கே ராதாகிருஷ்ணன், வீணா ஜார்ஜ் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்று வருகிறார்கள்
3:53 PM, 20 May
திருவனந்தபுரம்: கேரளா முதல்வராக பதவியேற்ற பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
என் சகோதரர் பினராயி விஜயனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் - மு.க ஸ்டாலின்
Best wishes to my brother @vijayanpinarayi on his swearing in as @CMOKerala and I hope that his determination and perseverance will lead to social equality, peace and prosperity for the people.
திருவனந்தபுரம்: முதல்வர் பினராயி விஜயனுனை தொடர்ந்து 21 அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்
3:41 PM, 20 May
திருவனந்தபுரம்: முதல்வர் பினராயி விஜயனுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்
Thiruvananthapuram: Pinarayi Vijayan takes oath as the Chief Minister of Kerala, being sworn in by Governor Arif Mohammad Khan. pic.twitter.com/HyWRDh9u3u
திருவனந்தபுரம்: முதல்வர் பினராயி விஜயனுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்
3:39 PM, 20 May
திருவனந்தபுரம்: கேரளா முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் பதவி ஏற்றார்
3:37 PM, 20 May
திருவனந்தபுரம்: முதல்வர் பினராயி விஜயனின் பதவி ஏற்பு விழாவில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன
3:37 PM, 20 May
சமூக இடைவெளியுடன் விருந்தினர்கள் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
3:34 PM, 20 May
கேரளா
கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவியேற்பு விழாவில் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு
3:34 PM, 20 May
கேரளா
திருவனந்தபுரம்: பதவி ஏற்பு விழா நடக்கும் சென்ட்ரல் மைதானத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் வருகை
3:30 PM, 20 May
கேரளா
கேரளா முதல்வராக பினராயி விஜயன் இன்று 2-வது முறையாக மாலை 3.30 மணிக்கு பதவியேற்கிறார்
அவருடன் 3 பெண் அமைச்சர்கள் உட்பட 21 அமைச்சர்களும் இன்று பதவியேற்கின்றனர்
பதவி ஏற்பு விழா இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது
இந்த பதவியேற்பு விழாவுக்கு 500 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
6:57 AM, 12 May
தமிழ்நாடு
தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக இன்று பதவியேற்கிறார் அப்பாவு.
சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக இன்று பொறுப்பேற்கிறார் கு.பிச்சாண்டி
12:35 PM, 11 May
தமிழ்நாடு
தமிழக சட்டசபை சபாநாயகராக போட்டியின்றி தேர்வானார் அப்பாவு
12:35 PM, 11 May
தமிழ்நாடு
தமிழ்நாடு சட்டசபை துணை சபாநாயகராக போட்டியின்றி தேர்வானார் கு. பிச்சாண்டி
12:34 PM, 11 May
தமிழ்நாடு
தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிக்கு பகல் 12 மணிவரை அப்பாவு, கு. பிச்சாண்டி தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை
12:34 PM, 11 May
தமிழ்நாடு
தமிழக சட்டசபை சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் பகல் 12 மணியுடன் நிறைவு
12:06 PM, 11 May
தமிழ்நாடு
தமிழக சட்டசபை சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வாகிறார்; சபாநாயகர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.
11:57 AM, 11 May
தமிழ்நாடு
கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்
10:57 AM, 11 May
தமிழ்நாடு
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார்
10:49 AM, 11 May
தமிழ்நாடு
இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவி ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரவர் தொகுதி மக்களை கொரோனாவிலிருந்து காப்பதை முழுமுதற் கடமையாகக் கருதி செயலாற்றும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்- கமல்ஹாசன்
இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவி ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரவர் தொகுதி மக்களை கொரோனாவிலிருந்து காப்பதை முழுமுதற் கடமையாகக் கருதி செயலாற்றும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று தொடங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் உறுதி மொழி ஏற்றுக் கொண்டார்
10:10 AM, 11 May
முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபை உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார்
10:10 AM, 11 May
தமிழ்நாடு
முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்கள் சட்டசபை உறுப்பினராக பதவியேற்று வருகின்றனர்
10:07 AM, 11 May
தமிழ்நாடு சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்த்தெடுக்கப்பட்ட திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்!- ப. சிதம்பரம்
10:04 AM, 11 May
தமிழ்நாடு
16-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை பின்பற்றி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது
READ MORE
4:50 PM, 1 May
அஸ்ஸாமில் 126 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அஸ்ஸாமில் ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் மெகா கூட்டணியை உருவாக்கி சவாலாக களத்தில் இருக்கிறது.
4:50 PM, 1 May
மேற்கு வங்கத்தில் 292 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் மரணம் அடைந்ததால் வாக்குப் பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங், பாஜக, காங்கிரஸ்- இடதுசாரிகள் இடையே போட்டி.
4:50 PM, 1 May
புதுச்சேரியில் 30 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது; புதுச்சேரியில் என்.ஆர். காங்- அதிமுக- பாஜக ஒரு அணியாகவும் திமுக- காங் ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன.
4:51 PM, 1 May
கேரளாவில் 140 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது; கேரளாவில் ஆளும் இடது முன்னணி- காங். தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாஜக ஆகியவை தேர்தல் களத்தில் பிரதான போட்டியாளர்கள்
4:51 PM, 1 May
தமிழகத்தில் திமுக, அதிமுக, அமமுக, மநீம ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன; நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட்டது.
4:52 PM, 1 May
தமிழகத்தில் 234 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது; காலை 9.30 மணிக்கு முதல் சுற்று முடிவுகள் வெளியாகலாம்
4:52 PM, 1 May
234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும் நாம் தமிழர் கட்சி 117 பெண்களை வேட்பாளர்களாக களமிறக்கியது.
4:52 PM, 1 May
அதிமுக 178 தொகுதிகளில் போட்டியிட்டுகிறது. மொத்தம் 15 பெண்களை அதிமுக வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது.
4:52 PM, 1 May
திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 12 பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது
5:45 PM, 1 May
அமைதியான முறையில் வெற்றி விழா நடைபெறட்டும் - ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை.
வாக்கு எண்ணிக்கை நாளில் அதிமுக தொண்டர்கள் அமைதியாகவும் ஆற்றலுடனும் நடந்து கொள்ள வேண்டும்
5:56 PM, 1 May
கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் - ஓபிஎஸ், இபிஎஸ்.
அண்ணா வழியில் அமைதியாக வெற்றி விழா நடைபெறட்டும் - ஓபிஎஸ், இபிஎஸ்
7:14 PM, 1 May
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் நியமிக்கப்பட்ட 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
1,559 தேர்தல் அலுவலர்கள், காவலர்கள், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது .
பரிசோதனையில் 63 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
7:16 PM, 1 May
வெற்றி எனில் கொண்டாடத் தேவை இல்லை தொண்டர்களுக்கு கமல் கடிதம் .
நாளை வெளியாக இருக்கும் தேர்தல் முடிவுகளுக்காக ஆவலோடு காத்திருப்பீர்கள் .
ஆர்வமிகுதியில் உங்கள் பாதுகாப்பை மறந்துவிடக் கூடாது .
தோல்வி எனில் துவள வேண்டியதில்லை என தொண்டர்களுக்கு கமல் ஆறுதல்
8:01 PM, 1 May
புதுச்சேரியில் தேர்தல் முடிவுகள் வெளிவர காலதாமதம் ஆகலாம்.
புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பூர்வா கார்க் தகவல்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி வெற்றி ஊர்வலம் நடத்தக்கூடாது.
வெற்றிபெற்ற உடன் இனிப்பும் வழங்கக்கூடாது.
வெற்றி வேட்பாளர் சான்றிதழ் பெற வரும்போது 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்
8:48 PM, 1 May
குடும்பத்தினருடன் கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்
8:55 PM, 1 May
தபால் ஓட்டுகளை நிராகரிக்க 10 காரணங்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
தபால் ஓட்டுகளில் எது செல்லும், எது செல்லாது என்பதை அந்த தொகுதி தேர்தல் அதிகாரி முடிவு செய்வார்.
தபால் ஓட்டு எண்ணுவதை கண்காணிக்க அனுபவம் வாய்ந்த முகவர்கள் நியமனம்.
போலியான வாக்குச் சீட்டாக இருக்குமாயின் அது செல்லாது.
ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளருக்கு வாக்களிக்கப்பட்டிருப்பின் அது செல்லாது
9:04 PM, 1 May
காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும்
9:29 PM, 1 May
தமிழகம் முழுவதும் இருந்து நேற்று வரை 5,64,253 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன.
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்.
கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும்.
ஒரு சுற்றுக்கு 500 தபால் வாக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு எண்ணப்படும்
9:30 PM, 1 May
கொரோனா தொற்று காரணமாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 6 பேர் மாற்றம்.
இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படும்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும்.
இடைப்பட்ட நேரத்தில் வாக்கும் எண்ணும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும்
9:44 PM, 1 May
கொலை வழக்கு பதியலாம் என்ற சென்னை ஹைகோர்ட் கருத்துக்கு எதிராக தேர்தல் ஆணையம் அப்பீல்.
சென்னை உயர்நீதிமன்றம் கூறிய கருத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.
கொரோனா விதிமீறலை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என ஹைகோர்ட் குற்றச்சாட்டு
9:44 PM, 1 May
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் 108 மையங்களில் எண்ணப்படுகின்றன.
256 கம்பெனி மத்திய துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு
10:32 PM, 1 May
விருதுநகர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்ல இருந்த 61 முகவர்களுக்கு கொரோனா உறுதி.
22 ஊழியர்கள், 3 அலுவலர்கள் உள்பட 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
10:51 PM, 1 May
குருஷேத்திர யுத்தத்தில் ஸ்டாலின் முதல்வராக வர வேண்டியது காலத்தின் கட்டாயம்.
திமுக 200 தொகுதிகளில் வெல்லும் என நாஞ்சில் சம்பத் பேட்டி.
தமிழகத்தில் திமுக தான் ஆட்சி அமைக்கப் போகிறது.
20 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் கட்சி பெற்றுவிட்டால் எதிர்கட்சி அந்தஸ்தை பெறும்
11:49 PM, 1 May
5 மாநில சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னும் சில மணிநேரங்களில் தொடங்க உள்ளது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.
தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படுகின்றன.
கொரோனா பரவல் விதிமுறைகளைப் பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது
12:12 AM, 2 May
தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் 75 மையங்களில் எண்ணப்படுகின்றன.
ஒவ்வொரு மையத்திலும் 4 முதல் 5 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்படும்.
ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன
12:16 AM, 2 May
ஒவ்வொரு மேஜையிலும் தேர்தல் பணி மேற்கொள்ளும் ஒரு அலுவலர் இருப்பார்.
ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் 14 முகவர்களும் ஒரு முதன்மை முகவரும் அனுமதிக்கப்படுவார்கள்
12:20 AM, 2 May
மேஜையில் குறிப்பிட்ட சட்டப்பேரவை தொகுதிக்கான இயந்திரம் மட்டுமே வைக்கப்படும்.
பதிவான மொத்த வாக்குகள் மற்றும் பிற விவரங்கள் கட்டுப்பாட்டு இயந்திரத்தில் பதிவாகி இருக்கும்.
வேட்பாளர்களுக்கு பதிவான வாக்குகள் திரையில் தெரியும்
12:20 AM, 2 May
வேட்பாளர்களுக்கு பதிவான வாக்குகள் அறிவிக்கப்பட்ட பிறகு, நோட்டா வாக்குகள் அறிவிக்கப்படும்.
14 மேஜைகளிலும் அடுத்த சுற்றுக்கான கட்டுப்பாட்டு இயந்திரம் வைக்கப்படும்.
வாக்கு சாவடி எண்ணிக்கையை பொறுத்து சுற்றுகளின் எண்ணிக்கை மாறுபடும்.
15 முதல் 30 வரை செல்ல வாய்ப்புகள் உண்டு
1:14 AM, 2 May
கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கு ஏப்ரல் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக விஜய் வசந்த் களமிறங்கியுள்ளார்.
பாஜக வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்
1:16 AM, 2 May
கொரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியுடன் மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒவ்வொரு சுற்று முடியும் மெதுவாக அறிவிக்கப்படும்.
முடிவுகள் வெளியாக தாமதமாகும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முடிவுகள் வெளியான பின்னர் கொண்டாட்டங்களுக்கு தேர்தர் ஆணையம் தடை விதித்துள்ளது