பத்மநாபனை கைது செய்யுங்கள்.. பாத்திமாவிற்காக ஸ்டாலின் குரல் தர வேண்டும்..கேரளாவில் பெரும் போராட்டம்
ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை காரணமாக கேரளாவில் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதற்காக தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று கேரளா மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
Recommended Video
சென்னை: ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை காரணமாக கேரளாவில் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதற்காக தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று கேரளா மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா சென்னையில் தற்கொலை செய்துகொண்டார். சென்னை ஐஐடியில் படித்து வந்த அவர், மனஅழுத்தம் மற்றும் பேராசிரியர்களின் மத ரீதியான பாகுபாடு காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
பாத்திமா தற்கொலை வழக்கு சிசிபிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான தனிப்படை இந்த வழக்கை இனி விசாரிக்கும் என்று ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி அளித்துள்ளார்.

கேரளா மரணம்
கேரளாவை இந்த மரணம் தற்போது உலுக்கி இருக்கிறது. கேரள மாணவர்கள் பலர் தமிழகத்தில் படிக்கிறார்கள். சென்னை, சேலம், கோவை, தருமபுரி, கன்னியாகுமரி என்று பல மாவட்டங்களில் கேரள மாணவர்கள்தான் அதிகம் படிக்கிறார்கள். இந்த தற்கொலை அந்த மாணவர்களை எல்லாம் மொத்தமாக உலுக்கி இருக்கிறது.

போராட்டம்
கேரளாவில் எல்லா கல்லூரியிலும் மாணவர்கள் அமைப்பு இருப்பது இயல்பான விஷயம். அதிகமாக இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சியை சார்ந்து அமைப்புகள் கேரளாவில் இருக்கிறது. இவர்கள்தான் தற்போது பாத்திமா தற்கொலைக்கு நீதி கேட்டு போராட்டம் செய்து வருகிறார்கள்.

நீதி வேண்டும்
நேற்று மதியத்தில் இருந்து கேரளாவில் பல பகுதிகளில், கல்லூரி வளாகங்களில் பாத்திமாவிற்கு நீதி வேண்டும் என்று கேட்டு மாணவர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். அவர்கள் இந்த போராட்டத்தில் நிறைய கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

தமிழகத்திலும் வேண்டும்
அதன்படி தமிழக மாணவர்கள் இதற்காக போராட வேண்டும். கேரளாவில் வெள்ளம் வந்த போது தமிழர்கள் உதவினார்கள். அப்படித்தான் இதுவும். இதற்காக தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

மதம் காரணம்
அதேபோல் இந்த தற்கொலைக்கு மதரீதியான காரணங்கள் இருக்கிறது. அதை விசாரணையில் கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும். பாத்திமா தன்னுடைய தற்கொலைக்கு காரணம் பேராசிரியர் சுதர்சனம் பத்மநாபன் என்று கூறியுள்ளார். ஆனால் அவரை இன்னும் போலீசார் கைது செய்யவில்லை.

சுதர்சனம் பத்மநாபன் கைது
பேராசிரியர் சுதர்சனம் பத்மநாபனை போலீசார் உடனே கைது செய்ய வேண்டும் என்று கேரளாவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கு எதிர்க்கட்சி அழுத்தம் தர வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் இதில் உடனடியாக குரல் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பெரிய அளவில் வெடிக்கும்
இதனால் தற்போது தமிழகத்திலும் ஆங்காங்கே போராட்டங்கள் தொடங்கி உள்ளது. தென்னிந்திய அளவில் இந்த பிரச்சனை பெரிதாகும் என்கிறார்கள். ஸ்டாலின் இது தொடர்பாக இன்று காலை பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications